December 7, 2025, 11:52 PM
24.6 C
Chennai

ஆண்களின் பிரத்யேக கோயில்: 10 ஆயிரம் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா!

devadanam mukavur vanapetchi amman temple - 2025

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மலை அடிவார கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கோயில் குருபூஜை விழா நடந்தது.

தேவதானம் மேற்கு தொடர்ச்சி அடிவாரம் முகவூர் தெற்கு தெருவில் வனப்பேச்சி அம்மன் கோயில் உள்ளது. முகவூரில் பல்வேறு சமூகத்தினர் வசித்தாலும் ஹிந்து நாடார் குடும்பத்தில் உள்ள ஆண்களின் அருமை குறித்து பெண்களுக்கும், பெண்களின் அருமை குறித்து ஆண்களுக்கும் உணர்த்தும் விதமாகவும் பல்வேறு குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாகவும் வனப்பேச்சி அம்மன் அருள்வாக்கு கூறியதால் பல தலைமுறைகளாக இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.

ஆண்களுக்கென பிரத்தியேக கோயிலாக உள்ள இங்கு விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மதியம் பெண்களை மட்டும் ஊரில் விட்டுவிட்டு சிறுவர்கள் இளைஞர்கள் என அனைத்து ஆண்களும் 4000 கிலோ அரிசி மளிகை பொருள் காய்கறிகளுடன் வனப்பேச்சி அம்மன் கோயில் வளாகத்திற்கு வந்தனர்.

ஆண்கள் வெளியேறியதும் பெண்கள் ஊரில் நுழையும் 12 பொது பாதைகளையும் மூடினர். அலைபேசி, கண்காணிப்பு கேமரா உபயோகம் கூடாது. கதவை பூட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளுடன் வனப்பேச்சி அம்மனை வழிபாடு செய்து பாரம்பரிய விளையாட்டுகளுடன் இரவு முழுவதும் துாங்காமல் விழா கொண்டாடினர்.

ஆண்கள் மலையடிவார கோயிலில் சிறிய குடில்கள் அமைத்து தங்குவதுடன் இரவு முழுவதும் இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் சேர்ந்து உணவு சமைத்து மொத்தமாக சுவாமிக்கு படையல் இட்டனர்.

பின் குடில்களில் போடப்பட்ட இலைகளில் படையல் உணவை அனைவருக்கும் பகிர்ந்த பின் சிறப்பு வழிபாடு அரோகரா கோஷம் எழுப்பியதும் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் அன்னப்பிரசாதத்தை எடுத்துக்கொண்டு நேற்று ஊர் திரும்பினர்.

எல்லையில் காத்திருந்த பெண்களிடம் பிரசாதத்தை காட்டிய பின் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு அத்துடன் விழா நிறைவடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இத்திருவிழாவால் அப்பகுதி விழாக்கோலமாக காணப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories