December 6, 2025, 3:34 AM
24.9 C
Chennai

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

500x300 1879955 supreme court 1 - 2025
#image_title

நாளைக்கே- “மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை”-

“தமிழகம் தொடர்பான பிரச்னைகளில் உச்சநீதி மன்றம் தாமாக முன்வந்து (Suo Motto) ஏதேனும் எடுத்தால் அதற்குத் தமிழக அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்”-

“ஆளுநர் என்பவர் எவ்வாறு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் மசோதாக்களில் கை எழுத்துப் போட மட்டுமே அதிகாரம் உள்ளவரோ அதே போன்று உச்சநீதி மன்றமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கும் அதிகாரம் மட்டுமே கொண்டது”-

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது எவ்வளவு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டோ சிவில் குற்றச்சாட்டோ பதிவானாலும் அதன் மீது தீர்ப்பளிக்கும் உரிமை சபாநாயகருக்கு மட்டுமே உள்ளது – கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதி மன்றம் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகளில் தலையிட முடியாது – சபாநாயகர் கூறும் தீர்ப்பே இறுதியானது”…

இப்படி விதம் விதமாக தீர்மானங்களை போட்டு – அதற்கு ஆளுநரும் கையெழுத்துப் போட்டு – உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அனுப்பினாலும் அனுப்புவார்கள்!

உடனே உச்சநீதிமன்றம் தலையிட்டு இப்படி எல்லாம் தீர்மானம் போட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?- என்று அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும்!

அட்டர்னி ஜெனரல் – “இந்த மாதிரி எல்லாம் தீர்மானம் போட அதிகாரம் ஏதும் மாநில அரசுக்கு இல்லை”- என்று கருத்து தெரிவிப்பார்.

உடனே மாநில அரசு – “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் என்பதே ஆகப் பெரிய உரிமைகளும் அதிகாரங்களும் பெற்ற அமைப்பு. அதன் முடிவுகளுக்கு இசைவு தெரிவிப்பதை தவிர உச்சநீதி மன்றத்துக்கு வேறு வழியில்லை!”

“ஆளுநர் என்பவர் மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு கை எழுத்துப் போட்டு அனுப்பும் போஸ்ட் மேன் என்றால் அதன் மீது ஒப்புதல் முத்திரை குத்தும் போஸ்ட் மாஸ்டர் போன்றதுதான் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எல்லா நீதிமன்றமும்!”- இப்படி ஒரு வாதத்தை “மக்கள் ஜனநாயக” வக்கீல்களை நியமித்து மாநில அரசு முன்வைக்கும்!

இதைக் கேட்டுவிட்டு உச்சநீதி மன்ற நீதிபதிகள் கொண்ட “பெஞ்ச்” ஒன்று அமைக்கப்படும்.

” மாநில அரசுக்கு இப்படி எல்லாம் தீர்மானம் இயற்ற அதிகாரம் இல்லை – தனது அதிகார வரம்பை மாநில அரசு மீறியுள்ளது”- என்று பெஞ்ச் நீதிபதிகள் தீர்ப்பளிப்பார்கள்.

அதிலும் 3 பேர் இப்படி- 2 பேர் வேறு மாதிரி என்று தீர்ப்பளிப்பார்கள்.

இப்படியே மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்.

நாமும் பொழுது போவதற்கு சுவாரஸ்யமாக இதை எல்லாம் வேடிக்கை பார்ப்போம்!

கருத்து: முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories