December 6, 2025, 4:31 AM
24.9 C
Chennai

போலீஸ்காரர் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி, தோட்டாக்கள்!

crime scene - 2025


விருதுநகர் அருகே கள்ளத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாக போலீஸ் ஒருவரை கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொருவரும் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக விருதுநகர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சாத்தூர்- விருதுநகர் 4 வழிச் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.

இந்நிலையில், பட்டம்புதூர் பகுதியில் மது போதையில் இருவர் சந்தேகப்படும்படி உள்ளதாக கிராம மக்கள் வச்சகாரப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றனர். போலீசைக் கண்டதும், ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பியுள்ளார்.

மற்றொருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர், கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கொடி எனவும், விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணி புரிவதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கி மற்றும் 5 குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

எனவே, அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, சிறைக்கு அழைத்து செல்லும் போது, தனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், நகைகளை விற்க வேண்டும் என சுரேஷ் அழைத்ததால் சென்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தப்பியோடிய சுரேசையைம் போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து பூசாரிப்பட்டியைச் சேர்ந்த இராமசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில், வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories