December 6, 2025, 4:36 AM
24.9 C
Chennai

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

kadeswara subramaniam hindu munnani - 2025

திருச்சி மக்கள் உடல்நிலை பாதிப்பிலும் திமுகவின் இந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது…

திருச்சியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்ததால் இந்த பாதிப்பு என்று பத்திரிகை செய்திகள் தெரிவித்தன. பல நகரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை எப்போதும் எழுந்து வருபவைதான்.

சமீபகாலமாக பெரும்பாலன மக்கள் நகராட்சி குடிநீரை சமைக்க பயன்படுத்துவதற்கு பதிலாக கேன் தண்ணீரை விலைக்கு வாங்கிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினை குறித்து 21.4.25 ல் சட்டசபையில் பதிலளித்த அமைச்சர் திரு‌. கே.என். நேரு குடிநீரில் பிரச்சினை இல்லை என்றும் திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவு, இலவசமாக தரப்பட்ட குளிர்பானங்கள் மூலம் நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பதில் அளித்துள்ளார். இத்தகைய கருத்தை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய பதில் திமுகவின் இந்து விரோத போக்கையே காட்டுகிறது. எந்த முகாந்திரமும் இல்லாமல் இந்துக்கள் புண்ணியமாகக் கருதி, தூய்மையாக செய்து, இலவசமாக அளிக்கும் அன்னதானம் பற்றி அவதூறு பரப்புவது திமுகவின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக அன்னதானம் செய்ய உணவு கட்டுப்பாட்டு துறையின் தரச் சான்று பெற வேண்டும் என்று கூறியது திமுக அரசு. மேலும் திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் அன்னதானம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஒவ்வொரு கோவில்களிலும் பிரசாதக்கடை, ஸ்வீட் ஸ்டால் நடத்தப்படுகிறது. அதற்கு உணவு கட்டுப்பாட்டுத் துறை லைசென்ஸ் மற்றும் பரிசோதனை நடத்தப்படுகிறதா?

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

சமீபத்தில் பிரபல ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்ட பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கச்சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரி பாதியிலேயே ஏதோ காரணத்தால் திரும்பினார் என்று செய்தி வெளிவந்து பரபரப்பானது. இதனை குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பிய இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு.ஜெகன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தது காவல்துறை.

ஆனால் எந்த முகாந்திரமும் இல்லாமல் அமைச்சர் திரு.கே.என். நேரு, கோவில் அன்னதானத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை இவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது மக்கள் கேள்வியாக இருக்கிறது.

கோவிலுக்கு வந்தவர்களுக்கு அங்கு தரப்பட்ட உணவை சாப்பிட்டவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்பதை எதன் அடிப்படையில் அமைச்சர் தெரிவித்தார்?

அதே சமயம் நகராட்சி குடிநீர் நிறுத்தப்பட்டு லாரிகளில் குடிநீர் வழங்குவதாக கூறுகிறார் அமைச்சர். அப்படி குடிநீரில் கழிவுநீர் கலப்பு இல்லை என்றால் அதனை ஏன் நிறுத்த வேண்டும்? அரசின் அலட்சியத்தை மறைக்க இந்த நடவடிக்கையா?

அமைச்சர் திரு.கே.என். நேரு தெய்வ நம்பிக்கை உடையவர். அவர் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியதை கண்டிக்கிறோம். மக்கள் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் அவர் வெக்காளியம்மன் கோவிலில் அளித்த அன்னதான உணவாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டதை வாபஸ் வாங்கி, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்குவதற்கு சபாநாயகரிடம் முறையிட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories