February 19, 2026, 6:27 PM
28.4 C
Chennai

தளத்தை தகர்த்ததாக கதை விட்ட பாகிஸ்தான்; செல்ஃபி எடுத்து FACT Check செய்த பிரதமர் மோடி!

pm modi in udampur base - 2026

இந்தியாவில் உள்ள ஆதம்பூர் விமானத் தளத்தை பாகிஸ்தான் படைகள் தகர்த்ததாக பாகிஸ்தான் தனது நாட்டின் டிவி.,க்களில் கதை விட்டது. அதை ஃபேக்ட் செக் செய்யும் வகையில், இன்று காலையே அதே தளத்துக்குச் சென்று வீரர்களுடன் செல்ஃபி எடுத்து, அதை சமூகத் தளத்திலும் வெளியிட்டு, பாகிஸ்தானின் பொய்களை அம்பலப் படுத்தினார் பிரதமர் மோடி! 

எல்லையோர மாநிலமான பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்த வீரர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். பின்னர், வீடியோக்கள் மற்றூம் படங்களை வெளியிட்டு, இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன் என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டார். 

குறிப்பாக, இந்தத் தளத்தையும், இதில் இருந்த எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனத்தையும் பாகிஸ்தான் விமானப் படை தகர்த்ததாக அந்நாடு ஊடகங்களில் கதை அளந்தது. அதை நம்பி இந்தியாவிலும் சிலர் அது குறித்த கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தார். இதற்கு பதிலடியாக இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு பிஐபி ஃபேக்ட் செக் செய்து உண்மைச் செய்தியை வெளியிட்டு வந்தது. ஆனால் அது போதாது என்று எண்ணிய பிரதமர் மோடி, நேற்று இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சிகளில் உரையாற்றிய கையோடு இன்று காலை, தொடர்புடைய ஆதம்பூர் விமானப் படைத் தளத்துக்கு நேரில் சென்று, அங்கிருந்த வீரர்களுடன் சிரித்துப் பேசியபடி, அவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களுடனான படங்களையும் எடுத்து உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.  

தற்போது இந்த படங்களும் வீடியோவும் சமூகத் தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இது குறித்து அவர் சமூகத் தளத்தில் குறிப்பிட்டிருப்பது… 

இன்று ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்று நமது துணிச்சலான வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவகமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது நாட்டிற்காக நமது ஆயுதப் படைகள் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories