தமிழகம் வரும் பிரதமர் மோடி; இதெல்லாம் நடக்குமா? ஆவலில் மக்கள்!

Published:

pm modi in rameswaram meeting - 2026

இன்று தூத்துக்குடியில் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் சிறப்பு ரயில்களாக இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருவனந்தபுரம் வடக்கு தாம்பரம் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக நிரந்தரமாக இயக்க அறிவிப்பாரா என தென்மாவட்ட ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார்.

தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​பட்​டுள்ள விமான நிலை​யத்​தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதற்​காக மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை பிரதமர் மோடி திறந்​து​வைத்த பின்​னர், செட்​டி​நாடு கட்​டிடக் கலையை பிர​திபலிக்​கும் வகையில் அமைக்​கப்​பட்​டுள்ள விமான நிலைய பயணி​கள் முனை​யம் உள்​ளிட்ட இடங்​களைப் பார்​வை​யிடு​கிறார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

பின்​னர், விமான நிலைய வளாகத்​தில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொண்​டு, தமிழகத்​தில் ரயில்வே துறை சார்​பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்​பிலான பணி​கள், தேசிய நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் முடிக்​கப்​பட்​டுள்ள ரூ.2,557 கோடி மதிப்​பிலான பணி​களை திறந்து வைக்​கிறார்.

கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தில் ரூ.548 கோடி​யில் 3 மற்​றும் 4-வது உலை​யில் இருந்து மின்​சா​ரத்தை வெளி​யேற்​று​வதற்​காக உள்ள மின் பரி​மாற்ற அமைப்பு பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். மொத்​தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணிகளை பிரதமர் தொடங்​கி​வைத்​துப் பேசுகிறார்.

இந்த விழாவில் பிரதமர் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பாரா என தென் மாவட்ட வரை பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பல ஆண்டுகளாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலாக இயங்கும் விரைவு ரயில் தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் வடக்கு முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயிலாக முதலில் வாரம் இரு முறை இயக்கப்பட்டு பிறகு வாரம் ஒரு நாளாக இயக்கப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கேரளா தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்த இந்த ரயில் நிரந்தரமாக தினசரி ரயிலாக இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொல்லம் திருநெல்வேலி கொல்லம் மதுரை இடையே புதிய மெமோ ரயில்களையும் இயக்கவும் கோட்டயத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக ஈரோடு இயக்க உள்ள ரயிலை விரைவில் அறிவிக்கவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயங்கிய கொல்லம் செங்கோட்டை கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்கவும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் புதிய ரயில்களில் ஏதாவது ஒரு சில ரயில்கள் ஆவது இயக்கப்பட பிரதமர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img