தமிழகம் வரும் பிரதமர் மோடி; இதெல்லாம் நடக்குமா? ஆவலில் மக்கள்!

pm modi in rameswaram meeting - 2026

இன்று தூத்துக்குடியில் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைக்கும் பிரதமர் சிறப்பு ரயில்களாக இயங்கும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருவனந்தபுரம் வடக்கு தாம்பரம் சிறப்பு ரயில்களை தினசரி ரயில்களாக நிரந்தரமாக இயக்க அறிவிப்பாரா என தென்மாவட்ட ரயில் பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தூத்​துக்​குடி​யில் விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட விமான நிலை​யத்தை பிரதமர் நரேந்​திர மோடி இன்று திறந்து வைத்​து, ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்​கிவைக்​கிறார்.

தூத்​துக்​குடி​யில் சர்​வ​தேச தரத்​தில் ரூ.452 கோடி​யில் விரிவாக்​கம் செய்​யப்​பட்​டுள்ள விமான நிலை​யத்​தின் திறப்பு விழா இன்று (ஜூலை 26) இரவு 8 மணிக்கு நடை​பெறுகிறது.

பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​று, விரி​வாக்​கம் செய்​யப்​பட்ட தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை திறந்​து ​வைத்​து, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார். இதற்​காக மாலத்​தீ​வில் இருந்து இந்​திய விமானப் படைக்கு சொந்​த​மான தனி விமானத்​தில் இன்று இரவு 7.50 மணி​யள​வில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​துக்கு பிரதமர் வரு​கிறார். அவருக்கு முக்​கியப் பிர​முகர்​கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

தூத்​துக்​குடி விமான நிலை​யத்தை பிரதமர் மோடி திறந்​து​வைத்த பின்​னர், செட்​டி​நாடு கட்​டிடக் கலையை பிர​திபலிக்​கும் வகையில் அமைக்​கப்​பட்​டுள்ள விமான நிலைய பயணி​கள் முனை​யம் உள்​ளிட்ட இடங்​களைப் பார்​வை​யிடு​கிறார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பின்​னர், விமான நிலைய வளாகத்​தில் நடை​பெறும் விழா​வில் கலந்து கொண்​டு, தமிழகத்​தில் ரயில்வே துறை சார்​பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்​பிலான பணி​கள், தேசிய நெடுஞ்​சாலைத் துறை சார்​பில் முடிக்​கப்​பட்​டுள்ள ரூ.2,557 கோடி மதிப்​பிலான பணி​களை திறந்து வைக்​கிறார்.

கூடங்​குளம் அணுமின் நிலை​யத்​தில் ரூ.548 கோடி​யில் 3 மற்​றும் 4-வது உலை​யில் இருந்து மின்​சா​ரத்தை வெளி​யேற்​று​வதற்​காக உள்ள மின் பரி​மாற்ற அமைப்பு பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டு​கிறார். மொத்​தம் சுமார் ரூ.4,500 கோடி மதிப்​பிலான திட்​டப் பணிகளை பிரதமர் தொடங்​கி​வைத்​துப் பேசுகிறார்.

இந்த விழாவில் பிரதமர் பல்வேறு புதிய ரயில் திட்டங்களை துவக்கி வைப்பாரா என தென் மாவட்ட வரை பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பல ஆண்டுகளாக வாரம் ஒரு முறை சிறப்பு ரயிலாக இயங்கும் விரைவு ரயில் தினசரி ரயிலாக நிரந்தரமாக இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் வடக்கு முதல் தாம்பரம் வரை சிறப்பு ரயிலாக முதலில் வாரம் இரு முறை இயக்கப்பட்டு பிறகு வாரம் ஒரு நாளாக இயக்கப்பட்ட ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கேரளா தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்த இந்த ரயில் நிரந்தரமாக தினசரி ரயிலாக இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

இந்த இரு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் வர்த்தகர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொல்லம் திருநெல்வேலி கொல்லம் மதுரை இடையே புதிய மெமோ ரயில்களையும் இயக்கவும் கோட்டயத்தில் இருந்து கொல்லம் செங்கோட்டை ராஜபாளையம் வழியாக ஈரோடு இயக்க உள்ள ரயிலை விரைவில் அறிவிக்கவும், ஏற்கனவே மீட்டர் கேஜ் வழித்தடத்தில் இயங்கிய கொல்லம் செங்கோட்டை கோயம்புத்தூர் தினசரி ரயிலை மீண்டும் இயக்கவும் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் புதிய ரயில்களில் ஏதாவது ஒரு சில ரயில்கள் ஆவது இயக்கப்பட பிரதமர் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என்று பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories