பிரிவினைவாதிக்கு சாமரம்; தேசியவாதி மீது வழக்கு! நாட்டை அழிக்கத் தூண்டும் திமுக., அரசின் அணுகுமுறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

இந்தியா மீது படையெடுப்பு என்று முஸ்லீம் பேசினால் வழக்கில்லை, அதை கண்டித்த தேசியவாதி மீது வழக்கு – திமுக அரசின் அணுகுமுறை இந்தியாவை அழிக்கத் தூண்டும் பயங்கரவாதம்-காவல்துறை வேடிக்கை பார்க்கிறதா? என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதக்கி என்பவர் இந்தியாவின் மீது படையெடுக்கும் முஸ்லிம்களை அல்லா நரகத்திற்கு அனுப்ப மாட்டார் என பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

தமிழகத்தின் பொது அமைதியை குலைக்கும் வகையில் மதவெறியை தூண்டி பேசியுள்ளார். இவர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், சுன்னத் ஜமாத் ஸ்டுடென்ட் பெடரேஷன், சுன்னத் ஜமாத் பாலகர் சங்கம் போன்ற அமைப்புகள் ஏற்பாடு செய்த தாவா யாத்திரையில் கலந்து கொண்டவர்.

இத்தகைய மதவெறியாக பேசி தேசத்தின் அழிவை தூண்டும் இவரைப் பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல், தமிழக அரசும் காவல்துறையும் அலட்சியமாக இருக்கின்றன.

கடந்த காலங்களில் இதுபோன்ற வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுகள் தான் மதக் கலவரங்கள் ஏற்பட வழி வகுத்தன என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

நமது நாட்டிலேயே இருந்து கொண்டு, நமது நாட்டின் மீது படையெடுப்போம் என பேசிய கொடூர எண்ணம் கொண்ட உஸ்தாத்தை கைது செய்ய வேண்டும் என்ற பொறுப்பு உணர்வு காவல்துறைக்கு இல்லை. இத்தகைய வன்முறை, தேச விரோத பேச்சு, வெறுப்புணர்வை தூண்டுவோர் மீது காவல்துறை தாமாக முன்வந்து வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் கருத்தை தமிழக காவல்துறை மதிக்கவில்லை.

மாறாக உஸ்தாத்தின் பேச்சின் அபாயத்தை எடுத்து கூறி தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரித்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி கழகத்தின் தலைவரும், சிறந்த தேசபக்தருமான ஊடகவியலாளர் பால கெளதமன் அவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

யாரும் தாமாக முன்வந்து புகார் கொடுக்காத நிலையில் சமூக வலைத்தள கண்காணிப்பு குழு உதவி ஆய்வாளர் மூலம் புகார் அளித்து அதை வழக்காக பதிவு செய்துள்ளது, ஒரு தலைபட்சமானது. தேசவிரோதிகளுக்கு சாதகமாக காவல்துறை செயல்பட்டு வருவது வேதனையான உண்மை.

முஸ்லிம்களை இந்தியாவின் மீது போர் தொடுக்க சொல்லும் உஸ்தாத்தின் பேச்சு சமூக அமைதியை பாதிக்கவில்லையா? அது தேசத்திற்கு அச்சுறுத்தல் இல்லையா?

ஆனால் அவர் பேசிய கருத்து நமது தேசத்திற்கு எதிரான கருத்து என என பேசிய பாலகௌதமன் அவர்களின் கருத்து சமூக அமைதியை பாதிக்கும் எனக்கு காவல்துறை விளக்கம் அளிப்பது கேலிக்கூத்தானது.

தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் முஸ்லிம் பயங்கரவாத பேச்சுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் உந்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத செயல்களுக்கு தயார் செய்யப்படுகின்றனர். கோவையில் நடந்த மனித வெடிகுண்டு சம்பவத்தை மறக்க வேண்டாம்.

இத்தகைய ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு விடுவதால் வரும் காலத்தில் பயங்கரவாத செயல்கள் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதை காவல்துறை உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்தால் கூட அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளும் திமுக அரசு, பயங்கரவாத பேச்சுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

ஆன்மீக பேச்சாளர்களையும், நல்ல சிந்தனையாளர்களையும் அரசியல் விமர்சனம் செய்யும் ஊடகவியலாளர்களையும் திட்டமிட்டு சிறையில் அடைத்து விட்டு தேச விரோத கருத்துக்களை கூறுபவர் மீது ஆதரவளிப்பது திராவிட மாடலின் கொள்கையாக உள்ளது.

சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக பயங்கரவாதம் பேசுபவர்களை ஆதரிப்பதும், நாட்டின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் சீர்குலைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற செயலாகும்.

தமிழக அரசும் பயங்கரவாதத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை.

யாராவது அதை சுட்டிக்காட்டி பேசினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தொல்லை கொடுப்பது சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாகும்.

கடவுள் மறுப்பு பேச்சுக்களும், நமது ராணுவ வீரர்களுக்கு எதிரான பேச்சுகளும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அமைப்புகள் சார்பாக வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க ஆளுங்கட்சி தயாராக இல்லை.

தேச நலன் விரும்பி யாராவது கருத்துக்களை வெளியிட்டால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுவது இந்த அரசின் வாடிக்கையாகி விட்டது.

ஸ்ரீ டிவியின் இயக்குனரான பாலகவுதமன் அவர்கள் சிறு வயது முதலே தெய்வபக்தியும் தேசபக்தியும் கொண்ட சிந்தனையாளர். சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் சிறந்த பேச்சாளர். அவர்மீது பொய் வழக்கு பதிவு செய்து காவல்துறை தேடி வருவது அபத்தத்திலும் அபத்தம்.

தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பயங்கரவாதிகள் பயிற்சி எடுப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வருகிறது. இவர்களையெல்லாம் கண்காணிக்காமல் கைது செய்யாமல், பால கௌதமன் அவர்களை கைது செய்ய நினைப்பது, கருத்து சுதந்திரத்தின் ஆணிவேரை அறுக்கின்ற செயலாகும்.

வெறுப்பு பேச்சு பேசியவர்கள் மீது தாமாகவே முன்வந்து காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை, தமிழக அரசிற்கும், காவல்துறைக்கும் மீண்டும் நினைவுப்படுத்துகிறோம்.

மத வெறுப்புணர்வுடன் பேசிய உஸ்தாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், பால கௌதமன் அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories