செங்கோட்டை – தாம்பரம் முன்பதிவில்லா தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!

railway news - 2026
#image_title

தாம்பரம் – செங்கோட்டை & செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

விஜயதசமி மற்றும் தொடர்ந்து வந்த பூஜை விடுமுறைகளை. முன்னிட்டு, தாம்பரம் செங்கோட்டை இடையே ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. செங்கோட்டையில் இருந்து பூஜை விடுமுறை முடிந்து சென்ற வழக்கமான பொதிகை, சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள பொதுப் பெட்டிகளில் பயணிக்க, செங்கோட்டை ரயில் நிலையத்தில் மட்டும் கடந்த ஞாயிறு அன்று 1750 முன்பதிவில்லா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் தீபாவளிக்கு தாம்பரம் செங்கோட்டை – தாம்பரம் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கினால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கடிதங்கள் எழுதியுள்ளனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் தெற்கு ரயில்வே பொது மேலாளர் , ஏனைய தலைமையக அதிகாரிகள், மதுரை திருச்சி சென்னை கோட்ட மேலாளர்கள், மதுரை விருதுநகர் தென்காசி நாடளுமன்ற உறுப்பினர்கள், ரயில்வே அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் , ஒலிபரப்புதுறை அமைச்சர் முருகன், ரயில்வே வாரிய தலைவர், பாஜக டில்லி தலைவர் ஆசிர்வாதம் ஆச்சாரி, தமிழக பாஜக தலைவர் நயினார்நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் ஐயாசாமி, தமிழக பாஜக தலைமையக நிர்வாகிகள் ஆகியோருக்கு தாம்பரம் செங்கோட்டை & தாம்பரம் செங்கோட்டை இடையே முன் பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி கால பண்டிகை சிறப்பு ரயில்களை இயக்கிட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

இந்த சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து செங்கோட்டைக்கு 18/10/25 சனிக்கிழமை மாலை புறப்பட்டு விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் திருத்தங்கல் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் பாம்புகோவில் சந்தை கடையநல்லூர் தென்காசி வழியாக 19/10/25 ஞாயிறு காலை செங்கோட்டைக்கு வர வேண்டும்.

மறு மார்க்கத்தில் 20.10.25 திங்கள்கிழமை மாலை செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்கு புறப்பட்டு 21/10/25 செவ்வாய் காலை தாம்பரத்தை அடைய வேண்டும். குறைந்த அளவு ரயில்களே சென்னைக்கு இயக்கப்படும் செங்கோட்டை – தென்காசி- ராஜபாளையம் – சிவகாசி – விருதுநகர் வழித்தட பயணிகள் இந்த தீபாவளி சிறப்பு ரயில்களின் இயக்கத்தால் பெரிதும் பயனடைவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories