U19 WC: 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி சாதித்த இளம் இந்திய அணி!

u19 worldcup india won - 2026

யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இளம் இந்திய அணி சாம்பியன் ஆனது. 14வயது வீரர் வைபவ் சூரியவன்ஷி அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து சாதனை படைத்தார்.

ஜிம்பாப்வே, நமீபியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடைபெற்றது. ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்த பைனலில் இந்திய. இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஆரோன் ஜார்ஜ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.  எனினும் மற்றொரு வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிரடி காட்டி ஆடினார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 80 பந்துகளில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் என எடுத்து, 175 ரன்னில் ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 , வேதாந்த் திரிவேதி 32, விஹான் மல்ஹோத்ரா 30, அபியான் குன்டு 40, அம்பரீஸ் 18 என ரன்களை சேர்க்க, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 411 ரன் எடுத்தது. 

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

412 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் பென் டாவ்கின்ஸ் மற்றும் ஜோசப் மூர்ஸ் ஆகியோர் ஓரளவு ரன் சேர்த்தனர். மூர்ஸ் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். டவ்கின்ஸ் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் மேயஸ் 45 ரன்னிலும், கேப்டன் தாமஸ் ரேவ் 31 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். முதல் 4 விக்கெட் வரை சிறப்பாக விளையாடி வந்த இங்கிலாந்து அணி, அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை மிகக் குறைந்த ரன் இடைவெளியில் இழக்க, இந்திய அணியின் வசம் வெற்றி சாதகமானது. காலேப் பால்கோனர் மட்டும் சிறப்பாக விளையாடி 115 ரன் எடுத்து  ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியைத் தழுவியது. 

இதனால், 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி யு19 உலகக் கோப்பையை 6வது முறையாகக் கைப்பற்றியது. இதுவரை நடைபெற்ற 16 சீஸன்களில், இந்திய அணி 19 வயது உலகக் கோப்பை தொடரின் பைனலுக்கு 10 வது முறையாக முன்னேறியது. இதில் 2000, 2008, 2012, 2018, 2022,2026 என ஆறு முறை சாம்பியன் ஆனது.

இதுவரை யு-19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன்கள் : 
2000: முகமது கைப்
2008: விராட் கோலி
2012: உன்முக்த் சந்த்
2018: பிரித்வி ஷா
2022: யாஷ் துல்
2026: ஆயுஷ் மாத்ரே

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

இந்தப் போட்டியில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான விளையாட்டு வித்தையை வெளிப்படுத்தியவர் 14 வயதே நிரம்பிய இளம் வைபவ் சூரியவன்ஷி. 

vaibhav suryavanshi - 2026

இவர் ஒரு ஐபிஎல் பிளேயர். U19 போட்டியில் அழுத்தமான சூழ்நிலையில் எல்லாம் ஒழுங்காக விளையாட மாட்டார் என்று விமர்சித்தார்கள். விஜய் ஹசாரே போட்டியில் 150+ ரன்கள் அடித்த போது இந்திய பவுலர்களிடம்  மட்டும்தான் வீரத்தைக் காட்டுவான் என்றார்கள். ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் சரியா விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடினார். ஆக, இவர் ஐபிஎல் போட்டிக்கு தான் லாயக்கு, இன்டர்நேஷனல் போட்டிக்கு தகுதியான ஆள் இல்லை என்று பாகிஸ்தான் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கிரிக்கெட்டர்களும்  விமர்சனத்தை முன்வைத்தார்கள். ஆனாலும் உள்ளூரில் வைபவ்க்கு ரசிகர் படை பெரிதானது. 

இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடியாக  U19 உலக கோப்பை இறுதிப் போட்டியில் செம காட்டு காட்டி விட்டார் சூரியவன்ஷி! 80 பந்தில் 175 ரன்கள். 15 பவுண்டரி மற்றும் 15 சிக்ஸர். தன்னால் என்ன செய்யமுடியும் என்று இந்த உலகத்துக்குக் காட்டி விட்டார்! அடுத்து, U19 உலகக் கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர் (15) அடித்து சாதனை படைத்தார்!

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

55 பந்தில் செஞ்சுரி, 71 பந்தில் 150 ரன்கள். அதாவது, அடுத்த 16 பந்தில் 50 ரன் சேர்த்து சாதனை.  

இந்திய அணிக்கு முதல் 25 ஓவரில் 250-2 கிடைத்தது என்றால் காரணம் சூரியவன்ஷி! சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பின், அடுத்த 25 ஓவரில் 161 -7 எடுத்தது இந்திய அணி. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Entertainment News

Popular Categories