காங்கிரஸுக்கு இந்திய மக்கள் ஒரு சுமை: மாநிலங்களவையில் வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி!

modi ji parliament speech - 2026

தமிழில், குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நான் அசாம் பற்றிப் பேசுகிறேன்.  அங்கே தேர்தல் என்பதால் கூறுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம்.  இவங்க கொள்ளை பாவம் செஞ்சிருக்காங்க அதனால பேச வேண்டியிருக்கு.  காங்கிரஸ் வாய்ப்பந்தல் மட்டும் போடும்.  அதை அமல் செய்வது பற்றி கொஞ்சமும் கவலை கிடையாது. 

இப்போது அசாமின் போகிபீல் பாலத்தையே எடுத்துக் கொள்வோமே!!  இந்த போகிபீல் பாலம், அசாமையும் அருணாச்சலையும் இணைக்கும் மிக முக்கியமான பாலம்.  பல ஆண்டுகளாக இந்தத் திட்டம் தொங்கலில் இருந்தது.  நாங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி அதை பரிசீலனை செய்தோம்.  மேலும், அசாமுடன் சேர்ந்து ஒட்டுமொத்த வடகிழக்கிற்கும், மிகப்பெரிய வசதியளிக்கும் பணியை, நாங்கள் நிறைவேற்றினோம். 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, அமலாக்க விஷயம் பற்றிப் பேசுகிறோம் என்றால் நாங்கள், நாங்கள் எப்போதும் ஆதாரங்களை முன்வைத்தே பேசுகிறோம்.  நாங்கள் திட்டங்களை நேரத்திற்குள்ளாக நிறைவேற்றுவதிலே, முன்னேறுகிறோம்…. இப்போதெல்லாம் நடக்கும் பணிகள், குறித்த காலம் முன்னேயே நடக்கிறது அதோடு, ஒட்டுமொத்த உலகும் வியந்து பார்த்தது….

நாங்கள் 2030க்குள்ளாக இந்த கட்டம் அடைவோம் என்ற போது, சூரியசக்தியிலே.  ஆனால் அதை 2025லேயே அடைந்து விட்டோம்.   நாங்கள் எத்தனால் விஷயத்தில் தீர்மானம் செய்ததை, 2-3 ஆண்டுகள் முன்னதாகவே நிறைவேற்றி விட்டோம்.  முன்னதாகவே நாங்கள் நிறைவேற்றுகிறோம் அதைவிட அதிகம் எங்களுடைய அமலாக்க ஆற்றல்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

மதிப்பிற்குரிய முன்னவர் அவர்களே. பாஜகவாகட்டும் எண்டியேவாகட்டும், எங்களுடைய, அணுகுமுறை, விஷயங்களைப் பார்க்கும் எங்களுடைய பார்வை, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலே எங்களுடைய சிந்தனை, இதில் காங்கிரஸுக்கு இடையே வானுக்கும் பூமிக்குமான தொலைவு.  பெரிய இடைவெளி. 

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் அளிக்கிறேன்.  எங்களுடைய சிந்தனை என்னவென்றால், அதாவது 140 கோடி நாட்டுமக்கள், இவர்கள், எத்தனை திறமையுள்ளவர்கள், அவர்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பார்கள்.  இதுதான் எங்களுடைய கருத்து.  நாங்கள் நாட்டுமக்களிடம் இந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம்.  அவர்கள் வல்லமை மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.  இதுதான் ஜனநாயகத்தின் வல்லமையாகவும் இருக்கிறது.  ஆனால் காங்கிரஸ் நாட்டுமக்களையே பிரச்சனையாகப் பார்க்கிறது.  இதமட்டும் கூறிவிட்டு நான் சென்றால், இன்று இரவு அவர்களுக்கு தூக்கம் வராமல் போகலாம்.  எப்படி என்னை வையலாம் என்று திட்டம் போட்டுக்கிட்டு இருப்பார்கள். 

ஆனால் நான் உதாரணத்தோடு பேச விரும்புகிறேன், எந்த வகையிலே நாட்டுமக்களைப் பற்றி நினைக்கிறார்கள் பாருங்கள்.  நாட்டின் குடிமக்களைப் பற்றி, நேருஜி இந்திராஜியின் எண்ணம் எப்படி இருந்தது, நான் இந்த விஷயம் குறித்துப் பேச விரும்புகிறேன்.  இந்திரா அவர்கள், ஒருமுறை ஈரான் சென்றிருந்தார்.  அங்கே ஈரானிலே அவர் உரையாற்றி இருந்தார்.  அந்த உரையின் போது அவர், நேரு அவர்களுடனான தன்னுடைய உரையாடலைக் குறிப்பிட்டிருக்கிறார். 

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

அவரே கூறியிருக்கிறார்.  அவர் கூறியிருக்கிறார், அவர்…. இந்திரா அவர்கள் கூறியதை நான் மேற்கோள் காட்டுகிறேன்.  யாரோ ஒருவர், என்னுடைய தந்தையாரிடம் கேட்ட போது, அதாவது, நேருஜியிடம் கேட்டிருக்கிறார்கள், அதாவது அவர்முன்பாக எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன?  அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?  35 கோடி. 

நேருஜி என்ன பதில் கொடுத்தார்?  அவர் முன்பாக இருந்த பிரச்சனை என்றால் 35 கோடி என்றார்.  அந்தக் காலத்திலே நமது தேசத்தின் மக்கட்தொகை 35 கோடி.  அடுத்து இன்னும் கேளுங்கள்!!  35 கோடி நாட்டுமக்கள் நேரு அவர்களுக்கு பிரச்சனையாகத் தெரிந்தார்கள். 

அந்த மாதிரி ஒரு பிரதமர் சிந்திக்க முடியுமா ஐயா?  மேலும், இந்த விஷயத்தை உதாரணமாக இந்திராஜி மேலும் கூறினார்.  இன்று நாட்டின் மக்கட்தொகை, 57 கோடியாகும்.  ஆகையால் என்னுடைய பிரச்சனைகளின் அளவும் அத்தனை மடங்கு அதிகரித்திருக்கிறது.  அதாவது தந்தையாருக்கு 35 கோடி நாட்டுமக்கள் பிரச்சனையாகத் தெரிந்தார்கள். 

இவருக்கோ 57 கோடி, பிரச்சனையாக இருக்கிறது.  இப்படியும் யாராவது இருக்க முடியுமா?  தன்னுடைய நாட்டுமக்களையே பிரச்சனையாகக் கருதுவார்களா?   இது தான் அவர்கள் எண்ணத்துக்கும் எங்களின் எண்ணத்துக்கும் இடையிலான வித்தியாசம்.  இது தான் எங்கள் அணுகுமுறைகளுக்கு இடையிலான வித்தியாசம்.  நேருஜியாகட்டும் இந்திராஜியாகட்டும் அல்லது ஒட்டுமொத்த காங்கிரஸ் நினைப்பாகட்டும், இவர்களெல்லாம், பாரத நாட்டுமக்களை, பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். 

ALSO READ:  விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

மதிப்பிற்குரிய அவை முன்னவர் அவர்களே, என்னுடைய பல மேற்கோள்கள் இருக்கின்றன.  நான் உலகத்தின் முன்பாகவும் நாட்டின் முன்பாகவும் கூறியிருக்கிறேன்.  நான் என்ன கூறியிருக்கிறேனோ, அதுவே என்னுடைய உறுதிப்பாடு.  எத்தனை தான் சவால்கள் முன்பாக இருக்கட்டுமே, அட 140 கோடிநாட்டுமக்கள் நம்முடன் இருக்கிறார்கள்.

திருட்டுத்தனம் செய்வது இவர்களுடைய பரம்பரைத்தொழில்.  இந்த நபர்கள், ஒரு குஜராத்தியின் குடும்பப் பெயரைக்கூட திருடி விட்டார்கள்.  காந்தியடிகளின் குடும்பப் பெயரைத் திருடி விட்டார்கள். 

இந்த நபர்களை, தேசத்தின் மக்கள் எத்தனை புத்திசாலிகள் என்றால், இவர்களை வெள்ளாவியில் வெளுத்துக் கட்டி விட்டார்கள் இவர்களை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் மே 29 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

Entertainment News

Popular Categories