திருப்பூர் எம்.பி., சத்யபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றதாக அவரது கணவர் கைது!

sathyabama vasu - 2026

திருப்பூர் அதிமுக எம்.பி சத்தியபாமாவை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப் பாளையம் கச்சேரிமேடு ஸ்ரீநகர் பகுதியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவரது மகன் சத்தியவசந்துடன் வசித்து வருகிறார். சத்தியபாமாவுக்கும், அவரது கணவர் வாசுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதில், பல ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பின்னணியில், அதிமுக எம்.பி சத்தியபாமாவை கடுமையாக விமர்சனம் செய்து, அவரது கணவர் வாசு சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வந்தாராம். இது அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், தனது மகன் சத்தியவசந்திற்கு திருமண ஏற்பாடுகளை சத்தியபாமா செய்து வந்துள்ளார். கோயம்புத்தூரில் சத்தியவசந்திற்கு இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில், நேற்றிரவு சத்தியபாமா வீட்டிற்கு கையில் கத்தியுடன் வந்துள்ளார் அவரது கணவர் வாசு. அப்போது, சத்யபாமாவை தகாத வார்த்தைகளில் திட்டிய வாசு, ஒரு கட்டத்தில் சத்தியபாமாவை தாக்க முற்பட்டாராம்.

sathyabama - 2026

இதனால் அதிர்ச்சி அடைந்த அருகிலிருந்த மகன் சத்தியவசந்த் மற்றும் சத்யபாமாவின் சகோதரர் சண்முகபிரபு ஆகியோர், வாசுவை தடுத்துள்ளனர். அவர்களையும் வாசு கத்தியால் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வந்து வாசுவை மடக்கிப் பிடித்து கோபிசெட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சத்தியபாமாவின் சகோதரர் சண்முகபிரபு காவல்நிலையத்தில் வந்து, சம்பவம் குறித்து புகார் அளித்தார். இதை அடுத்து வாசுவின் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், வாசுவைக் கைது செய்து, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி முன் ஆஜர்படுத்தினார். விசாரித்த நீதிபதி, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் வாசு அடைக்கப்பட்டார்.

முன்னதாக, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமாவுக்கும் அவரது கணவர் வாசுவுக்கும் பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார் வாசு. அதில், கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்தத் தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் பணம் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ.2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள்.

மனம் போன போக்கில் வாசுவைத் தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும்… என்று வாசு அந்த நோட்டீசில் குற்றம்சாட்டியிருந்தாராம்!

இந்தச் சம்பவம் இரு வருடங்களுக்கு முன்னர் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தன்னை ஜெயலலிதா அடித்துவிட்டார் என்று நாடாளுமன்றத்தில் அழுது புலம்பு புகார் கூறிய நேரத்தில்தான் இந்த விவாகரத்து நோட்டீஸ் விஷயமும் வெளியாகி ஜெயலலிதாவுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தது என்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories