தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் புகார்

tamilisai-soundararajan சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனாவை கோட்டையில் சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது அ.தி.மு.க.வினர் நேற்று கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எங்கள் வேட்பாளர் மற்றும் நிர்வாகிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைதியாக நடந்து கொண்டிருந்த பிரசாரத்தை சீர்குலைக்கும் வகையில் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் போலீசாரின் அனுமதியுடன்தான் நடந்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை அங்கிருந்து மாற்ற வேண்டும். அங்கு ஜனநாயகம், பணநாயகமாக மாறி இப்போது அராஜகமாக உருவெடுத்துள்ளது. 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அந்த பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு புதுபட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை நீக்கப்படவில்லை. அவர்கள் அராஜகம் செய்வதற்காகவே தொகுதியில் முகாமிட்டுள்ளனர். திருப்திகரமாக திருத்தப்பட்ட பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்வாறு திருத்திய பட்டியலை வெளியிட முடியாவிட்டால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும். சட்டம்–ஒழுங்கு கெட்டு ஒரு அசாதாரண நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. பொதுத்தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கனவே பணப்பட்டுவாடா முடிந்து விட்டது. இப்போதுதான் நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இது காலதாமதமான நடவடிக்கை. சொத்து குவிப்பு வழக்கில் முதல்–அமைச்சர் தண்டனை பெற்றதால் இடைத்தேர்தல் வந்திருக்கிறது. பொதுமக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். – என்றார்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories