கோதாவரியில் படகு மூழ்கி 25 பேர் உயிரிழந்த விபத்து; தொடரும் மீட்புப் பணிகள்!

boat accident telangana - 2026

கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணம் அருகில் கோதாவரி நதியில் மூழ்கிய படகு விபத்தில் இதுவரை மூழ்கிய படகை மீட்க முடியாமல் அரசுத் தரப்பு திண்டாடி வருகிறது. 25 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கோதாவரி நதியில் அதிகவேக சுழலில் சிக்கி கச்சலூரு அருகில் தலைகீழாக கவிழ்ந்தது. படகு மூழ்கியதால் பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். விபத்து நடந்தபோது 73 பேர் படகில் இருந்து உள்ளனர். அவர்களில் 27 பேர் உயிர் காக்கும் உபகரணம் மூலம் (லைஃப் ஜாக்கெட்) மற்றும் உள்ளூர் வாசிகள் மூலம் உயிர் பிழைத்தனர்.

மீதியுள்ளவர்களை கண்டுபிடிக்க முயற்சி நடக்கிறது. இந்த விபத்தில் 46 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது.

கோதாவரி நதியில் பாபிகொண்டலு எனப்படும் புகழ்பெற்ற மலைகளுக்கு இடையில் ஆன நதியில் படகுப் பயணம் சுற்றுலா பயணிகளின் உற்சாகமான இடம். ‘கண்டிபோச்சம்மா’ ஆலயத்திலிருந்து அந்தப் படகு கிளம்பி ஒரு மணி நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது.

அதிக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போது படகு செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் 10 மீட்டர் வரை சுழல் உள்ளது. மிகப்பெரிய அளவில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. படகு மூழ்கிய இடத்தில் கோதாவரி நதியின் ஆழம் 330 அடி. எனவே அந்தப் படகை வெளியே எடுப்பது அசாத்தியம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!
boat accident ap - 2026

60 அடி ஆழத்துக்கு மேல் கடல் உள் நீச்சலுக்குச் செல்பவர்கள் கூட செல்வது இயலாத காரியம் என்கின்றனர். நீரில் மூழ்கிய படகின் எடை 25 டன். நீரோட்டம் அங்கே அதி தீவிரமாக உள்ளது. செப்டம்பர் 15 அன்று இந்த விபத்து நடந்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளார்கள்.

இரு மலைகளுக்கிடையே வகுடு எடுத்தாற்போல் நதி செல்வதையே பாபிகொண்டலு என்பார்கள். பாபிடி என்றால் வகிடு என்று அர்த்தம். இது மிக முக்கியமான சுற்றுலாத்தலம். படகில் சென்று திரும்புவதே இதன் முக்கிய அம்சம்.

விபத்து ஏற்பட்ட படகுக்குச் சொந்தமானவர் விபத்து ஏற்பட்ட நிலையில் ஓடி ஒளிந்து விட்டார். அதிக அளவு பயணிகள் படகின் முதல் தளத்தில் ஏசி ரூமில் அடைபட்டுவிட்டதாக தெரிகிறது. அதனால் உடல்கள் வெளியே வரவில்லை எனக் கூறப் படுகிறது. நீரோட்டத்தின் கீழ்முகத்தில் வரலாம் என்ற யோசனையின் பேரில் அங்கு வலைகளை விரித்து தேடி வருகிறார்கள்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories