சோ குறித்த செய்தி: ஆயிரம் முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு

Published:

பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
 
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோ ராமசாமி குறித்து வதந்திகள் பரவின. இந்தத் தகவலை உறுதி செய்யாமல், நடிகை குஷ்புவும் வருத்தம் தெரிவித்து தகவல் வெளியிட்டார்.  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமி குறித்துக் கூறி, இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், பின்னூட்டம் அளித்த பலரும் சோ நலமாக உள்ளார் என  ரீ- டுவீட் செய்தனர்.
 
தனது செயலுக்காக குஷ்பு தற்போது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ”சோ ராமசாமி குறித்த ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை நான் உறுதிப் படுத்தாமல் செய்துவிட்டேன். என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img