டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ்-க்கு விரைவில் புதிய விதிமுறை

23 May17 test cricket - 2026டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறைக்கு முடிவுகட்ட சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐ,சி,சி) திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் எந்த அணி முதலில் பேட்டிங் அல்லது ஃபீல்டிங் செய்வது என்பதை முடிவு செய்யும் டாஸ் நடைமுறை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே கடந்த 1877-ல் நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து தொடர்ந்து வருகிறது. கிரிக்கெட் போட்டிகளின் மரபாகத் தொடர்ந்து வரும் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடர் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறுகிறது. அந்தத் தொடரின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்குகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து டாஸ் நடைமுறையைக் கைவிட ஐ.சி.சி திட்டமிட்டுள்ளதாகக் கிரிக்கெட் தொடர்பான செய்திகளைப் பதிவிடும் இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மும்பையில் வரும் 28 மற்றும் 29-ம் தேதி நடைபெறும் ஐ.சி.சி கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்பாக, அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை உள்ளூர் அணிகள் வெற்றி பெறுவதற்காக பிட்ச் உள்ளிட்டவற்றைத் தங்களுக்கு ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு கிரிக்கெட்டில் நீண்டகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. உள்ளூர் அணிகளுக்கு இதனால் பலன் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதற்கு முடிவுகட்டும் விதமாகவும் ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் மீதான ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் புதிய விதியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு அணிகளின் கேப்டன்களுக்கு, முதலில் பேட்டிங்/ஃபீல்டிங் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அளிக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெறும் ஐ.சி.சி-யின் கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories