பொதுவெளியில் அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் அறுவெறுப்பு தோன்றவும் கருத்துகளை எழுதியும் பகிர்ந்தும் வருவதில் இப்போது திமுக., தொண்டர்கள் முன்னணியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை நிரூபிப்பதுபோல் உள்ள ஒரு கருத்துக்கு நடிகை கஸ்தூரி பதில் கருத்து பதிவிட்டிருக்கிறார். அதில், கழக கண்மணி . தமிழகத்தின் தூ!ண் . தி தி சொ. 😅😅 என்று பதிவிட்டிருப்பது இந்த விபரீதத்தை உணர்த்துகிறது.
பெண்களைக் குறித்து பாலியல் ரீதியில் விமர்சிப்பது திமுக.,வின் தலைமை தொடங்கி தொண்டர் வரை பரவியுள்ள கலாசாரம். கருத்து ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாய், சாதீய ரிதியிலும், பெண்களை பாலியல் ரீதியிலும் ஒருமைப் படுத்தி கருத்துகளை முன்வைப்பார்கள். இவ்வகையில், நடிகை கஸ்தூரி, இலங்கையில் நடந்த தமிழர் இனப் படுகொலையை நினைவுகூரும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்தார்.
— kasturi shankar (@KasthuriShankar) May 20, 2018
பேஸ்புக்கில் பதிவு செய்து, டிவிட்டரில் பகிர்ந்திருந்த அந்தப் பதிவில்…
‘விழுந்தோம் இழந்தோம் எழுவோம்
மடிந்தோம் மறவோம் மன்னியோம்.
சரிந்தோம், மீண்டு நிமிர்வோம்
சரித்திரம் மீண்டும் படைப்போம்….
பீறிட்டு சிந்திய ரத்தத்தின் வெப்பத்தில்
வீறிட்டு பிறந்தோர் வீரர்கள் புதிதாய்
போரிட்டு தொலைந்தோர் போன பாதையில்
தேரிட்டு செல்லுமோர் நாளுண்டு நாளையில்.
கைகோர்ப்போம் ! நம்பிக்கைக்கோற்போம் !’
#May18TamilGenocide #NeverForget #NeverGiveUp
– என்று கூறியிருந்தார்.
தனது இந்தக் கருத்தில் நடிகை கஸ்தூரி, தி.மு.க.,வை விமர்சித்தோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்தோ எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் கஸ்தூரியின் இந்தக் கருத்து, ஈழப் போரில் லட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலை செய்யப் படக் காரணமாக இருந்த காங்கிரஸ் திமுக., கூட்டு சதியை தெரிவிப்பதாக நினைத்துக் கொண்டு, திமுக.,வைச் சேர்ந்த அல்லது ஆதரவாளராகக் கருதப் படும் அல்லது திமுக.,வே சம்பளத்துக்கு இருத்தி சமூகவலைத்தளங்களில் கருத்துப் பரவலாக்கத்தில் ஈடுபடுத்தி வரும் ஒருவர் நடிகை கஸ்தூரியை பாலியல் ரீதியில் மோசமாக விமர்சித்தார்.
கஸ்தூரியின் இந்தக் கருத்துக்கு பதிலிட்ட அந்த நபர், “ஏன் படுத்தவன் காசு கொடுக்காமல் போய் விட்டானா” என்று கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். அந்த நபர், தனது ட்விட்டர் ப்ரொபைல் படமாக திமுக., தலைவர் கருணாநிதியின் படத்தையும், கவர் படமாக திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் படத்தையும் வைத்து, திமுக.,வின் பிரசார பீரங்கியாக காட்சிப் படுத்தியிருக்கிறார். கஸ்தூரி, பாலியல் ரீதியான இந்தக் கருத்தை விமர்சிக்கும் விதமாக, “கழக கண்மணி . தமிழகத்தின் தூ!ண் . தி தி சொ. 😅😅 ” என்று பதிவிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக, திமுக.,வினர் இணைய வெளியில் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான வெறுப்புகளை அதிகம் தொடுத்து வருகின்றனர். அதுபோல், சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் கருத்துகளை அறுவறுக்கத் தக்க வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். கரூரில் போராட்டம் நடத்திய போது தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்ணையே பாலியல் ரீதியில் தொடர்ந்து துன்புறுத்தி, #இடுப்புகிள்ளிதிமுக என்ற பெயரையும் பெற்றனர். இது குறித்து சக கழகக் கண்மணி மீது புகார் கூறிய பெண்ணை கட்சியை விட்டே துரத்தி அடித்தனர். இது போன்ற சம்பவங்களும் கருத்து பதில்களும் திமுக.,வினர் பெண்களைக் குறித்து எத்தகைய பார்வையைக் கொண்டுள்ளனர் என்பதை பளிச்சிட வைப்பதாக அங்கலாய்க்கின்றனர் சமூக வலைத்தள வாசிகள்!