February 20, 2026, 11:55 PM
26.7 C
Chennai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

madurai high court - 2026

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு 2009ம் ஆண்டு அனுமதி பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம், கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் அனுமதியை புதுப்பித்துள்ளதாகவும், ஆனால், அனுமதி பெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல் தெற்கு வீரபாண்டியபுரத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டதுடன், இந்த விரிவாக்கத்தை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்ற வாரம் வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, தீர்ப்பினை இன்று வழங்குவதாக ஒத்திவைத்தது. இதன்படி சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறப்பட்டது. மேலும் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும், இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் ஜூன் 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories