தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

madurai high court - 2026

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்க கட்டுமான பணிகளுக்கு, இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமா என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு 2009ம் ஆண்டு அனுமதி பெற்ற ஸ்டெர்லைட் நிறுவனம், கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் அனுமதியை புதுப்பித்துள்ளதாகவும், ஆனால், அனுமதி பெற்ற இடத்தில் விரிவாக்கம் செய்யாமல் தெற்கு வீரபாண்டியபுரத்தில் பணிகளைத் தொடங்குவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டதுடன், இந்த விரிவாக்கத்தை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை சென்ற வாரம் வியாழக்கிழமை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, தீர்ப்பினை இன்று வழங்குவதாக ஒத்திவைத்தது. இதன்படி சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆம் கட்ட விரிவாக்கப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாகக் கூறப்பட்டது. மேலும் 2ஆம் கட்ட விரிவாக்கத்திற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதுவரை இடைக்காலத் தடை நீடிக்கும் என்றும், இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் ஜூன் 13ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories