கவிக்கோ கருவூலம் புத்தகத்தை அப்துல்ரகுமான் பவள விழாவில் வெளியிட்ட கருணாநிதி

Published:

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவும், ‘கவிக்கோ கருவூலம்’ புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கவிக்கோ விருது, கவிக்கோ ஆவணப்படம் வெளியீடு, கவிக்கோவின் இசைப்பாடல்கள் குறுந்தகடு வெளியீடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

நிறைவு விழா நிகழ்ச்சியில், கவிக்கோ கருவூலம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதை, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன், கவிக்கோ கவிதை அறக்கட்டளைக்கு பொற்கிழி வழங்கி நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கவிக்கோ அப்துல்ரகுமானை நீண்ட காலமாக நான் அறிவேன். வாணியம்பாடியில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்துக்கு நான் அழைக்கப்பட்டு இருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். அன்று முதல் இன்று வரை, இனியும் நான் இருக்கும் வரை, அவரை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட கவிஞர் அப்துல்ரகுமான். அவரைப்பற்றி, நான் உங்களிடம் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதராக, பாசமுள்ள மனிதராக என்னிடம் பழகி வருகிறார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

கவியரங்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். தமிழ் கவிஞர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதல் வரிசையில் அப்துல்ரகுமான் இடம்பெற்று இருப்பார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் அவர். நன்றி மறவாத நண்பராக இன்றும் விளங்கி வருகிறார் என கருணாநிதி பேசினார்.

தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஏற்புரை வழங்கினார். முன்னதாக கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘மகரந்த மழை’ என்ற குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, மற்றொரு இசையமைப்பாளரான ஜிப்ரான் பெற்றுக்கொண்டார்.

விழாவில்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img