அரசியல் கட்சிகள் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றதால் துப்பாக்கிச்சூடு: முதல்வர்

Published:

11 May24 cm press meet - 2026முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தி கைதாகியுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
சபாநாயகர் அறையில் 11 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு திடீரென மு.க.ஸ்டாலின் வெளியேறிவிட்டார். 15 நிமிடங்கள் கழித்து எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சரை பார்க்க சென்றதாகவும், ஆனால் முதலமைச்சர் மறுத்ததாகவும் செய்தி வெளியானது வேண்டுமென்றே திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் நான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்தபோது மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் அறைக்கு சென்றுள்ளார் எனவே முதலமைச்சர் தம்மை சந்திக்கவில்லை என மு.க.ஸ்டாலின் கூறியது உண்மைக்கு மாறானது 2013ஆம் ஆண்டிலேயே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஸ்டெர்லைட்டுக்கு மின்இணைப்பை துண்டித்தார் ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் ஆலையை துவங்க அனுமதி பெற்றது. எதிர்கட்சி மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம்,தவிர்க்க முடியாத நிலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்றார்

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Related articles

Recent articles

spot_img