இத்தாலியில் பயணிகள் ரயில் தடம்பிரண்டு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 18-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து நேற்று நள்ளிரவில் நடந்துள்ளது என்றும், ரயில் லெவல் கிராசிங்கை கடக்கும் போது டிரக் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ரயிலை ஒட்டி வந்த டிரைவர் பலியானார். மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்றும், இந்த விபத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

