பாஜக., நல்லதே செய்திருக்கிறது என்றாலும், எதிர்மறைக் கருத்துகளே வேகமாகப் பரவுகின்றன என்று கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அப்போது அவர், பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால், பாஜக குறித்த நேர்மறை கருத்துகளை விட, எதிர்மறைக் கருத்துகளே வேகமாக பரவுகின்றன என்று வேதனை தெரிவித்தார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால், மாநில அரசுகளின் வரி வருவாய் பாதிக்கப்படாது என்று கூறிய தமிழிசை, மத்திய அரசு, தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், பாஜக 5 ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் பாஜக.,வின் சாதனைகள் குறித்து பிரச்சாரம் செய்வோம் என்று குறிப்பிட்டார்.


