வன்னியர் சங்க தலைவர் குரு மரணம்: வட மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு

Vanniyar Sangam Kaduvetti Guru - 2026

பாமக.,வின் முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.

வெகு நாட்களாக நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சையில் இருந்த குருவை பாமக., நிறுவுனர் ராமதாஸ் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் பார்த்து நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும் பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.

காடுவெட்டி குரு 2001ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்து, நாடகக் காதல் திருமணங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். பின்னாளில் வன்னியர் சங்கமே பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே நாளை முற்பகல் உடல் தகனம் செய்யப் படுகிறது.

ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

kaduvetti guru bus - 2026

கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீதும் கல்வீசித் தாக்கப் பட்டது. இப்படி இங்கே 16 பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இப்படி தொடர் தாக்குதலால், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தன. அரியலூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.

திருவள்ளூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பஸ்கள் உடைக்கப்பட்டன. இப்படி 9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories