தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது : மு.க.ஸ்டாலின்

Published:

 
தமிழகத்தில் போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு அடக்குமுறையை ஏவிவிடுகிறது என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முகநூலில் தெரிவித்துள்ளார்.
 
முகநூலில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
 
டாஸ்மாக் கடையை நீக்கக்கோரி போராடிய சசிபெருமாள் மரணத்திற்கு வித்திட்ட இந்த அ.தி.மு.க. அரசு, மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தி அவர்களை சிறையில் அடைத்தது.
 
இப்போது கோவனை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருக்கிறது. மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடுவோர் மீது அ.தி.மு.க. அரசு இப்படி அடுத்தடுத்து அடக்குமுறையை ஏவிவிடுகிறது.
 
அ.தி.மு.க. படை போல் காவல்துறை செயல்படுவதும், மனித உரிமைகள் இப்படி கொடுங்கரத்தால் நசுக்கப்படுவதையும் பார்த்தால் ஏதோ நெருக்கடி நிலைமை தமிழகத்தில் அமலில் இருக்கிறதோ என்று அஞ்சத்தோன்றுகிறது. கோவனின் கைதிற்கும், மதுவிலக்கு போராட்டங்களை அடக்கும் அ.தி.மு.க. அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அ.தி.மு.க. அரசின் அதிகாரதுஷ்பிரயோகத்தின் முன்பு சட்டத்தின் ஆட்சியும், கருத்து சுதந்திரம் அளித்துள்ள அரசியல் சட்டமும் தலைகுனிந்து நிற்கின்றனவே என்று வேதனைப்படுகிறேன் என மு.க.ஸ்டாலின் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img