நடுக்கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்து : 22 பேர் பலி

Published:

அகதிகள் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 22 பேர் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக தினமும் ஆயிரக் கணக்கானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
 
அவ்வாறு அகதிகளாக வெளியேற நினைக்கும் பெரும்பாலானவர்கள் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செல்லும் சில படகுகள் கடல் கொந்தளிப்பு காரணமாக கடலினுள் மூழ்கி விபத்துக்குள்ளாகின்றன. இது போன்ற விபத்துகளில் சிக்கி இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த வரிசையில் துருக்கியில் இருந்து கிரீஸின் ரோட்ஸ் நோக்கி அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. காலிம்னோஸ் தீவுக்கு அருகில் வந்த போது அந்த படகு திடீரென நிலைதடுமாறி திடீரென்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில், 13 குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் பலியாயினர். 144 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img