இன்று நடக்கிறது புரோ கபடி லீக் ஏலம்

23 May29 pro kabadi league - 2026விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

மேலும் ‘எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் தங்களது அணிக்கு தேவையான ஓட்டுமொத்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளன.

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் குறைந்தது 18 முதல் 25 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் 3 வீரர்கள் எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் வெளிநாட்டு வீரர்களில் 2 முதல் 4 பேரை ஏலம் எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.4 கோடி வரை செலவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி.அருண் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி பர்தீப் நார்வால், ஜெய்தீப், ஜவஹர் தகார், மணீஷ் குமார் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியானது சுர்ஜித் சிங், மனீந்தர் சிங் ஆகியோரையும், பெங்களூரு புல்ஸ் அணியானது ரோஹித் குமாரையும், தபாங் டெல்லி அணியானது கே.சி.மீரஜ் ஷேக்கையும், குஜராத் பார்ச்சூன்ஜெயின்ட்ஸ் அணியானது சச்சின், சுனில் குமார், மகேந்திர கணேஷ் ராஜ்புத் ஆகியோரையும், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியானது குல்தீப் சிங்கையும், புனேரி பல்தான் அணியானது சந்தீப் நார்வால், ராஜேஷ் மோன்தால், ஜி.பி.மோரே, கிரிஷ் எர்னாக் ஆகியோரையும், தெலுகு டைட்டன்ஸ் அணியானது நிலேஷ் சாலுங்கே, மோஹ்சனையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், யு.பி.யோதா ஆகிய 3 அணிகள் எந்த வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories