இன்று நடக்கிறது புரோ கபடி லீக் ஏலம்

23 May29 pro kabadi league - 2026விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

மேலும் ‘எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் தங்களது அணிக்கு தேவையான ஓட்டுமொத்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளன.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் குறைந்தது 18 முதல் 25 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் 3 வீரர்கள் எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் வெளிநாட்டு வீரர்களில் 2 முதல் 4 பேரை ஏலம் எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.4 கோடி வரை செலவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி.அருண் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி பர்தீப் நார்வால், ஜெய்தீப், ஜவஹர் தகார், மணீஷ் குமார் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியானது சுர்ஜித் சிங், மனீந்தர் சிங் ஆகியோரையும், பெங்களூரு புல்ஸ் அணியானது ரோஹித் குமாரையும், தபாங் டெல்லி அணியானது கே.சி.மீரஜ் ஷேக்கையும், குஜராத் பார்ச்சூன்ஜெயின்ட்ஸ் அணியானது சச்சின், சுனில் குமார், மகேந்திர கணேஷ் ராஜ்புத் ஆகியோரையும், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியானது குல்தீப் சிங்கையும், புனேரி பல்தான் அணியானது சந்தீப் நார்வால், ராஜேஷ் மோன்தால், ஜி.பி.மோரே, கிரிஷ் எர்னாக் ஆகியோரையும், தெலுகு டைட்டன்ஸ் அணியானது நிலேஷ் சாலுங்கே, மோஹ்சனையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், யு.பி.யோதா ஆகிய 3 அணிகள் எந்த வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories