December 5, 2025, 4:27 PM
27.9 C
Chennai

இன்று நடக்கிறது புரோ கபடி லீக் ஏலம்

23 May29 pro kabadi league - 2025விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

மேலும் ‘எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் தங்களது அணிக்கு தேவையான ஓட்டுமொத்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளன.

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் குறைந்தது 18 முதல் 25 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் 3 வீரர்கள் எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் வெளிநாட்டு வீரர்களில் 2 முதல் 4 பேரை ஏலம் எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.4 கோடி வரை செலவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி.அருண் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி பர்தீப் நார்வால், ஜெய்தீப், ஜவஹர் தகார், மணீஷ் குமார் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியானது சுர்ஜித் சிங், மனீந்தர் சிங் ஆகியோரையும், பெங்களூரு புல்ஸ் அணியானது ரோஹித் குமாரையும், தபாங் டெல்லி அணியானது கே.சி.மீரஜ் ஷேக்கையும், குஜராத் பார்ச்சூன்ஜெயின்ட்ஸ் அணியானது சச்சின், சுனில் குமார், மகேந்திர கணேஷ் ராஜ்புத் ஆகியோரையும், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியானது குல்தீப் சிங்கையும், புனேரி பல்தான் அணியானது சந்தீப் நார்வால், ராஜேஷ் மோன்தால், ஜி.பி.மோரே, கிரிஷ் எர்னாக் ஆகியோரையும், தெலுகு டைட்டன்ஸ் அணியானது நிலேஷ் சாலுங்கே, மோஹ்சனையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், யு.பி.யோதா ஆகிய 3 அணிகள் எந்த வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories