இன்று நடக்கிறது புரோ கபடி லீக் ஏலம்

23 May29 pro kabadi league - 2026விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்த ஏலத்துக்கான பட்டியலில் மொத்தம் 422 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஈரான், வங்கதேசம், ஜப்பான், கென்யா, கொரியா, மலேசியா, இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 58 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

மேலும் ‘எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தொடரில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. மீதம் உள்ள 3 அணிகள் தங்களது அணிக்கு தேவையான ஓட்டுமொத்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளன.

ஒவ்வொரு அணியும் ஏலத்தில் குறைந்தது 18 முதல் 25 வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும். இதில் 3 வீரர்கள் எதிர்கால கபடி ஹீரோக்கள்’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதேவேளையில் வெளிநாட்டு வீரர்களில் 2 முதல் 4 பேரை ஏலம் எடுக்கலாம். ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக ரூ.4 கோடி வரை செலவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி.அருண் ஆகியோரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நடப்பு சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி பர்தீப் நார்வால், ஜெய்தீப், ஜவஹர் தகார், மணீஷ் குமார் ஆகியோரை அணியில் தொடர்ந்து நீடிக்கச் செய்துள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணியானது சுர்ஜித் சிங், மனீந்தர் சிங் ஆகியோரையும், பெங்களூரு புல்ஸ் அணியானது ரோஹித் குமாரையும், தபாங் டெல்லி அணியானது கே.சி.மீரஜ் ஷேக்கையும், குஜராத் பார்ச்சூன்ஜெயின்ட்ஸ் அணியானது சச்சின், சுனில் குமார், மகேந்திர கணேஷ் ராஜ்புத் ஆகியோரையும், ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியானது குல்தீப் சிங்கையும், புனேரி பல்தான் அணியானது சந்தீப் நார்வால், ராஜேஷ் மோன்தால், ஜி.பி.மோரே, கிரிஷ் எர்னாக் ஆகியோரையும், தெலுகு டைட்டன்ஸ் அணியானது நிலேஷ் சாலுங்கே, மோஹ்சனையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், யு.பி.யோதா ஆகிய 3 அணிகள் எந்த வீரர்களையும் தக்கவைத்துக் கொள்ளவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories