சென்னையில் இன்று டிஎன்பிஎல் வீரர்கள் ஏலம்

01 May31 sports - 2026தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை போல் தமிழ்நாடு அளவில் நடைபெறும் டிஎன்பிஎல் டி20 தொடர் கடந்த 2 ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளூர் விளையாட்டு வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தும் நோக்கத்துடன் இந்த போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தி வருகிறது. இதில் திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜயன்ட் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 2016ல் நடந்த முதல் சீசனில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2017ல் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன. 3வது சீசன் ஜூலை 11ம் தேதி தொடங்க உள்ள நிலையில், வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் கடந்த ஆண்டு தங்கள் அணியில் விளையாடிய 3 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனுமான அஸ்வின் உட்பட 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டிஎன்பிஎல் தொடரில் விளையாட, மே 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்திய அணிக்காக விளையாடும் நட்சத்திர ஆட்டக்காரர்கள் முதல் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் வரை மொத்தம் 794 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 3லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிசிசிஐ நடத்தும் முதல் தர போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு 1.50லட்சம், 2 லட்சம், 2.50 லட்சம் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம் என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

ஒரு அணி தக்கவைத்துள்ள வீரர்கள் உட்பட அதிகபட்சமாக 19 வீரர்களை தேர்வு செய்துக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு அணியும் ஏற்கனவே தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளதால் எஞ்சிய 16 வீரர்களை ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.
இப்படி தேர்வு செய்யும் வீரர்களில் குறைந்தபட்சம் 2 பேர் மாவட்டங்களை சேர்ந்த வீரர்களாக இருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 2 பேர் 1-9-2018ம் தேதியன்று 19 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதும் கட்டாயம். தேர்வு செயயப்பட்ட வீரர்களில் யாராவது காயமடையும் அல்லது பிசிசிஐ நடந்தும் உள்ளூர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டிய சூழல் வரலாம். அப்போது ஏலம் போகாத எஞ்சிய வீரர்களில் இருந்து விரும்பும் வீரர்களை அணிகள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

ஏலம் மொத்தம் 16 சுற்றுகளாக நடைபெறும். முதல் சுற்றில் நட்சத்திர வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். அடுத்த சிலநாட்களில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஒப்புதலுடன் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களின் பட்டியல், யார் கேப்டன் என்ற விவரங்களைவெளியிட உள்ளன. பெயர் மாறிய மதுரை அணி: கடந்த 2 சீசன்களில் மதுரை சூப்பர் ஜயன்ட் பெயரில் விளையாடிய மதுரை அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த சீசனில் அந்த அணியின் பெயர் மதுரை பேந்தர்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது. அணியின் நிர்வாகம் கைமாறி உரிமையாளரும் மாறியதால் அணியின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories