மகளிர் டி20… இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்.. பைனல்ஸ் போவோமா?

20 June10 cricket - 2026மலேசியாவில் நடந்துவரும் மகளிர் டி-20 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும்.

7வது மகளிர் டி-20 ஆசியக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடக்கின்றன. இதுவரை 4 முறை ஒருதினப் போட்டித் தொடராகவும், தற்போது மூன்றாவது முறை டி-20 போட்டித் தொடராகவும் இது நடக்கிறது.

இதுவரை நடந்த 6 ஆசியக் கோப்பை போட்டியிலும் இந்தியாவே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவை தலா 4 ஆட்டங்களில் மூன்றில் வென்று 6 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆசியக் கோப்பையில் இன்று நடக்கும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, பைனல் முன்னேறும். அதனால் இந்த ஆட்டம் கிட்டத்தட்ட அரை இறுதி ஆட்டமாகவே அமைந்துள்ளது.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் வங்கதேசம் விளையாடுகிறது. இதில் மலேசியா வென்றால், இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் தோல்வியடையும் அணிக்கு பைனல் முன்னேறும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், வங்கதேசம் தற்போதுள்ள பார்மில் அதற்கு சாத்தியம் இல்லை. அதனால், வங்கதேசம் பைனல் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வங்கதேசம் 6 புள்ளிகளுடன் உள்ளது. மலேசியா இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றிப் பெறவில்லை.

7வது முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் இந்திய மகளிர் அணி உள்ளது. கடந்த இரண்டு முறையும் பைனல் வரை முன்னேறிய பாகிஸ்தான், இந்த முறையும் பைனல் நுழைய முயற்சிக்கும். அதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான நாளைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories