முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

Published:

 

முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார்.

கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்ட அவர் மாலை சுமார் 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது போஸ் இல்லத்துக்கு சென்றடைந்தார்.

முன்னதாக கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார்.

சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதலமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img