ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்!

srirangam stalin - 2026

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.

இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு சென்றுள்ளார். காலை 6.45 மணி முதல் 9 மணி வரை இருந்துள்ளார். அவர் எதற்காக சென்றார் எனத் தெரியவில்லை. ஆனால் அங்கு ரங்கநாதர் கோயில் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆண்டாளின் திரு மஞ்சளை கோயில் புரோகிதர்கள் ஸ்டாலினுக்கு இட்டுள்ளனர். நெற்றியில் இடுவதற்கு அனுமதி அளித்து விட்டு, உடனே அதனை அவர் அழித்தது சரியல்ல.

இறை நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக ஸ்டாலின் கோயிலுக்கு செல்ல வேண்டும்? இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? அவருக்கு இறை நம்பிக்கையில்லா விட்டால், இறை நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று கூறினார்.

இதனிடையே நேற்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியிருந்த கருத்து விமரனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்!

நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா… கிடைக்காதா? பகுத்தறிவுவாதிகள் பதில் சொன்னால் பரவாயில்லை!

– என்று கிண்டல் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories