ஸ்டாலினின் ஸ்ரீரங்கம் விஸிட்… நக்கல் அடிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ராமதாஸ்!

srirangam stalin - 2026

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் திருச்சி, ஸ்ரீரங்கம் நகருக்கு வந்தார். அப்போது அவருக்கு கோயில் சார்பில் மரியாதைகள் செய்யப் பட்டன. ஸ்டாலின் கோயிலுக்குள் செல்லாமல், வாசலில் இருந்தே மாலை மரியாதைகளைப் பெற்றுக் கொண்டார்.

இது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது, ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு சென்றுள்ளார். காலை 6.45 மணி முதல் 9 மணி வரை இருந்துள்ளார். அவர் எதற்காக சென்றார் எனத் தெரியவில்லை. ஆனால் அங்கு ரங்கநாதர் கோயில் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது ஆண்டாளின் திரு மஞ்சளை கோயில் புரோகிதர்கள் ஸ்டாலினுக்கு இட்டுள்ளனர். நெற்றியில் இடுவதற்கு அனுமதி அளித்து விட்டு, உடனே அதனை அவர் அழித்தது சரியல்ல.

இறை நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக ஸ்டாலின் கோயிலுக்கு செல்ல வேண்டும்? இறைவனை அவமானப்படுத்த ஸ்டாலினுக்கு உரிமை வழங்கியது யார்? அவருக்கு இறை நம்பிக்கையில்லா விட்டால், இறை நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்று கூறினார்.

இதனிடையே நேற்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியிருந்த கருத்து விமரனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அவர்,

கண்ணாடியை திருப்பி வைத்தால் ஆட்டோ ஸ்டார்ட் ஆகும் என்ற அஜித் பட நகைச்சுவைக்கு அடுத்தப்படியாக, ஆகச் சிறந்த மூட நம்பிக்கை என்பது சுக்கிரபுத்திரி யாகம் நடத்தினால் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்பது தான்!

நெற்றியில் வைத்த மஞ்சள் பொட்டை அழித்து விட்டால், கோயிலுக்குள் நடத்திய சுக்கிரபுத்திரி யாகத்துக்கு பலன் கிடைக்குமா… கிடைக்காதா? பகுத்தறிவுவாதிகள் பதில் சொன்னால் பரவாயில்லை!

– என்று கிண்டல் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories