10 நாள்களுக்கு பிறகு இன்று கூடுகிறது சட்டப்பேரவை

05 June24 tamil nadu - 2026பத்து நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவை இன்று மீண்டும் தொடங்குகிறது. கடந்த 14-ஆம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப் பேரவை கடந்த மே 29-ஆம் தேதி தொடங்கியது. வனம், தகவல் தொழில்நுட்பம், பள்ளிக் கல்வி, உள்ளாட்சித் துறை, தொழில் துறை, நெடுஞ்சாலைகள், பொதுப்பணி என சில பிரதான துறைகளின் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கடந்த 14-ஆம் தேதியன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று பேரவை ஜூன் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதங்களின் மீது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றுகின்றனர். இந்த விவாதங்களுக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.

மானியக் கோரிக்கைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் காவல் துறை மானியக் கோரிக்கை வரும் செவ்வாய்க்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த விவாதங்களுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். வருவாய், சுற்றுச்சூழல், வணிகவரிகள் துறை, தொழிலாளர் நலத் துறை போன்ற துறைகளின் மானியக் கோரிக்கைள் மீதான விவாதங்கள் அடுத்தடுத்த நாள்கள் வரவுள்ளன.

சட்டப் பேரவை கூட்டத் தொடர் பத்து நாள்களுக்குப் பிறகு மீண்டும் கூடவுள்ள நிலையில், பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும், நாமக்கல்லில் திமுகவினர் கைது, எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவது, ஸ்டெர்லைட் விவகாரம் போன்ற பல முக்கிய பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories