May 19, 2025, 11:56 PM
29.2 C
Chennai

வணிகவரித் துறை அதிகாரிகளிடமிருந்து வணிகர்களைப் பாதுகாக்க ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளில் இருந்து வணிகர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது…. தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும் சேர்த்து கட்ட வேண்டுமென்று வணிக வரித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், அவர்கள் பிறப்பிக்கும் ஆணைகளுக்கு எதிராக வணிகர்கள் அளிக்கும் பதிலை ஏற்க மறுப்பதாகவும் செய்திகள் வருகின்றன. வணிகர்கள் மேல் முறையீடு செய்ய வேண்டுமென்றால், 25 சதவிகிதத் தொகையினை முன்கூட்டியே செலுத்த வேண்டிய சங்கடமான நிலை மதிப்புக் கூட்டுவரி சட்டத்தின்படி இருந்து வருகிறது. அப்படி மேல்முறையீடு செய்யும் வணிகர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இதனால் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கடைகளை மூடி, தொழிலை கைவிட்டு விட வேண்டிய அவலநிலைக்கு ஆளாகிறார்கள்.மேல்முறையீட்டு செய்யும் வணிகர்கள் 25 சதவிதத் தொகையை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டும், அதன்படி வணிகர்கள் நலன் கருதி, அரசு இதுவரை பரிவோடு பரிசீலனை செய்யவில்லை. வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தேச வரிவிதிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, கற்பனையான காரணங்களைக் காட்டி வரிவிதிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.இயற்கை நீதிக்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதிப்புகளையும், வணிகர்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையும், தமிழக அரசு அனுசரணையோடு ஆய்வு செய்து, வணிக வரித் துறை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறைகளிலிருந்து பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

ALSO READ:  குமரி அனந்தன் மறைவுக்கு இந்து முன்னணி இரங்கல்!

தமிழகத்தில் வணிகர்கள் பொருட்களை கொள்முதல் செய்யும் போது, ஏற்கனவே செலுத்திய வரித் தொகையையும் அவற்றுக்கான தண்டத் தொகையையும… Posted by M. K. Stalin on Monday, May 4, 2015

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

Topics

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

பஞ்சாங்கம் மே 19 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories