December 6, 2025, 6:51 AM
23.8 C
Chennai

போலி இன்சூரன்ஸ் கம்பெனி.. குறி வைத்து பதம் பார்க்கும் ஜோடி!

kiritharn
kiritharn

கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் 2 பேரும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க போனார்கள்.

அங்கே, அந்த நிறுவன ஊழியர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பேரும் தலா ரூ.52 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தார்கள். அப்போது எங்கள் நிறுவனத்தில், கஸ்டமர்கள் கட்டிய பாலிசி பணத்திற்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்று பால்ஜோசப் சொல்லி உள்ளார்.

இதனால், நேற்று முன்தினம் அதே இன்சூரன்ஸ் ஆபீசுக்கு ஸ்வேதாவும், கிரிதரனும் மறுபடியும் சென்று, தங்கள் இருவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று பால் ஜோசப்பிடம் கேட்டனர்.

அதற்கு அவர், பாலிசி எடுத்து 2 மாசத்தில் கடன் தர முடியாது, அது விதி இல்லை என்று சொல்லி உள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஸ்வேதா, தாங்கள் கட்டிய பாலிசி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார்.. அதற்கு பால் ஜோசப், பாலிசி பணம் கட்டியாகிவிட்டது, அந்த பணத்தை உடனே தர முடியாது என்றார்.

swatha
swatha

இதனால், ஆவேசம் அடைந்த ஸ்வேதாவும், கிரிதரனும், “நாங்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள், உங்களை விசாரிக்க வேண்டும்” என்று சொல்லி, பால்ஜோசப்பை அடித்து உதைத்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து கடத்தியும் உள்ளனர்.

அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜருக்கு போன் செய்து, நாங்க கட்டிய பாலிசி பணத்தை உடனடியாக பேங்க் அக்கவுண்ட்டில் போட்டால்தான், உங்கள் ஊழியரை ஒப்படைப்போம், அப்படி நீங்கள் பணம் தராவிட்டால், உங்கள் மனைவியை விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இதை கேட்டு பதறி போன அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், அவர்கள் கேட்ட பாலிசி பணத்தை ஸ்வேதா, கிரிதரன் அக்கவுண்ட்டிற்கு அனுப்பி வைத்தார்.

ஆனாலும் பால் ஜோசப்பை அவர்கள் விடுவிக்கவில்லை.. ஒரு குடோனில் அடைத்து வைத்துள்ளனர். சித்ரவதை செய்துள்ளனர். ரூ.1 லட்சம் கேட்டு மறுபடியும் மேனேஜருக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர்.

இதற்கு பிறகுதான், அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவக்கினர்.

அவர்களின் செல்போன் நம்பரை வைத்து டிரேஸ் செய்தனர். ஆனால், அதற்குள் கிரிதரனும் சுவேதாவும் பால்ஜோசப்பை தேனாம்பேட்டை சிக்னல் அருகே நடுராத்திரி காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு தப்பி உள்ளனர். பால்ஜோசப் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால், சம்பந்தப்பட்ட அந்த கிரிமினல் ஜோடியை காணோம்.. இந்த கடத்தல், மிரட்டல் சம்பந்தமாக ஸ்வேதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடியும் வருகிறார்கள்.

ஸ்வேதாவும் கிரிதரனும் கணவன் மனைவியாம். இவர்கள் போலியான கம்பெனி எதுவென்று பார்த்து பாலிசி எடுத்து மோசடியிலும் ஏமாற்றுவது இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த வகையில், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமே போலியானது என்று சொல்லப்படுகிறது. எனினும் முழு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories