February 21, 2026, 11:42 AM
29.5 C
Chennai

வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி

08 June 29 palanisamy - 2026வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை துரிதப்படுத்த சென்னையில் இருந்து கூடுதலாக 2 அதிகாரிகள் வரவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

எஸ்.பி.கே. நிறுவனம், அருப்புக்கோட்டையை சேர்ந்த செய்யாதுரைக்கு சொந்தமானது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முன்னிலையில் உள்ள நிறுவனம் இது.

எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனத்தின் அதிபர் செய்யாதுரை (வயது60), விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர். அரசு முதல்நிலை ஒப்பந்ததாரரான இவர், பல்வேறு சாலைகள், கட்டிடங்கள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

எஸ்.பி.கே. நிறுவனம் தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து திருமங்கலம் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் ஒப்பந்தப் பணியை செய்து வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க பல கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.

செய்யாதுரைக்கு அருப்புக்கோட்டை மட்டுமின்றி மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் உள்ளன. இன்று (ஜூலை 16) காலை 6 மணிக்கு அருப்புக்கோட்டையில் உள்ள இவரது வீட்டில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் நுழைந்தனர். அவர்கள் அங்கு அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் தான் தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்திற்கு மொத்தமாக முட்டை கொள்முதல் செய்யும் கிறிஸ்டி நிறுவன அலுவலகங்கள், உரிமையாளர் இல்லம் ஆகியவற்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ1300 கோடி அளவுக்கு கணக்கில் வராத ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு விருதுநகரை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் காமராஜ் என்பவர் நிறுவனங்கள், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி பகுதியை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் உள்ளிட்ட பலரும் இதேபோல ஐ.டி. ரெய்டில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது அதன் தொடர்ச்சியாக எஸ்.பி.கே நிறுவனமும் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியிருக்கிறது. இந்த ரெய்டில் கணக்கில் வராத 80 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னை, அருப்புக்கோட்டை அலுவலங்கள் உள்பட 30-க்கும் அதிகமான இடங்களில் சோதனை தொடர்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories