மானாமதுரையில் இன்று கடையடைப்பு நடத்த முடிவு

23 July23 shop bandh - 2026மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, இன்று மானாமதுரையில் முழுக் கடையடைப்பு போராட்டம் நடத்த, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்தில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய வைகையாற்றுப் பகுதிகளில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மானாமதுரை பகுதியைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஒன்றுதிரண்டு, குடிநீர்த் திட்டங்களை பாதிக்கும் குவாரிகளை அமைப்பதற்கு எதிரிப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், மானாமதுரை பகுதியில் முதல்கட்டமாக தெ.புதுக்கோட்டை கிராமத்தில் வைகையாற்றுக்குள் இம்மாத இறுதிக்குள் மணல் குவாரியை அமைத்து, மணல் விற்பனையை தொடங்க அரசு நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அடுத்தடுத்து, செய்களத்தூர், வாகுடி ஆகிய இடங்களிலும் குவாரிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அடுத்தக் கட்ட போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்ய மானாமதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகி ஏ.ஆர்.பி. முருகேசன் தலைமை வகித்தார்.

இதில், மானாமதுரை பகுதியில் மணல் குவாரிகள் அமைக்கும் அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், உடனே குவாரிகள் அமைக்கும் நடவடிக்கையை நிறுத்திவிட்டு குடிநீர்த் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும், மானாமதுரையில் இன்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்தவும், தெ.புதுக்கோட்டை கிராமத்தில் குவாரி அமைத்தால் அதற்குச் செல்லும் வாகனங்களுக்கான வழியில் மரங்களை வெட்டிப்போட்டு அடைத்து போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories