புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

Published:

18 Aug 05 tiger counting - 2026சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசிக்கின்றன. வனப்பகுதியில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இன்று முதல் கணக்கெடுப்பு தொடங்குகிறது. சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி என, ஏழு வனச்சரகர்கள், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்புக் காவலர்கள் தனித்தனியாக ஈடுபடுகின்றனர். ஜி.பி.எஸ்., கருவியும் பயன்படுத்தப்படுவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

Related articles

Recent articles

spot_img