அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்… அதிர்ச்சியில் உறைந்த திமுக.,வினர்!

alagiri - 2026

சென்னை:  திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் திமுக.,வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அழகிரியின் ஆட்டம் ஆரம்பம் என்றுதான் இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும் தோன்றுகிறது. மேலும் இது உதயநிதியின் தயாரிப்பு என்பதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோ திமுக.,வினர் மத்தியில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் மிகப் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தி.மு.க பொதுக்குழுவில் தான் யார் என்பதைக் காட்டுகிறேன் என்று ஸ்டாலினுக்கு அழகிரி சவால் #karunanidhi #stalin #Azhagiri விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து, திருவாரூருக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் கருணாநிதியின் பேரன் உதயநிதி, என்றும், திருப்பரங்குன்றம் தொகுதியில் மதுரை அஞ்சா நெஞ்சன் அழகிரி ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது காலியாகவுள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் அழகிரி நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

முன்னதாக சில ஊடகங்களில், ஸ்டாலினுக்கு பக்க பலமாக அழகிரி இருப்பார் என்று ஒரு புறத்தில் செய்திகள் பரப்பப் பட்டன. மனம் திறந்த அழகிரி என்று ஊடகங்களில் பரப்பப் பட்ட அந்த செய்திகளில், யாரோ ஒரு திமுக., புள்ளி பேசியதாக சில கருத்துகள் முன்வைக்கப் பட்டன. அதில், ஸ்டாலின் அழுதது, அழகிரியின் மனத்தில் தைத்துவிட்டதாகவும், அந்த அழுகைக்கு பரிசாக, திமுக., தலைமைப் பதவியை தம்பிக்கே விட்டுக் கொடுத்துவிட்டு, அழகிரி அவருக்கு உறுதுணையாக இருப்பதாக தீர்மானம் செய்துவிட்டது போலவும் செய்திகள் பரப்பப் பட்டன.

இந்நிலையில், அழகிரியின் இந்த பேஸ்புக் பதிவு, பலரின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. அந்த பேஸ்புக் வீடியோ பதிவு…

திமுக., செயற்குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது என்று ஒரு செய்தி வெளியானபோது, தொண்டர்கள் வேறு விதமாக இதைப் புரிந்து கொள்ளக் கூடும் என்று  நினைத்துதான், அது தலைவர் மறைவுக்கான அஞ்சலிக் கூட்டம் மட்டுமே என்று தெளிவுபடுத்தி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories