3ம் தேதி கட்டாயம் வந்துடுங்க… அழைப்பு விடுத்த அழகிரி!

mkazhagiri
mkazhagiri

வரும் 3ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. என் ஆதரவாளர்கள் கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று மு.க.அழகிரி தனது ஆதராளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2021இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்று கூறியிருந்தார் மு.க.அழகிரி. இதை அடுத்து அவரது அந்தப் பங்களிப்பு என்ன என்று அறிவதில் ஊடகத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.

இது குறித்து அழகிரி செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அழகிரியும், ஓட்டு போடுவது கூட அரசியல் பங்களிப்புதான் என்று சொல்லிப் பார்த்தார். இருப்பினும், அவர் கட்சி தொடங்குவாரா, வேறு கட்சியில் சேருவாரா, கூட்டணி வைப்பாரா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஊடகத்தினர்.

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், அழகிரி அவர் பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப் படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது தாயாரை சென்னை கோபாலபுரத்தில் சந்தித்துப் பேசி, ஆசி பெற்றார். இதை அடுத்து அவர் திமுக.,வில் சேருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தாம் திமுக., பக்கம் சேரப் போவதில்லை என்றும், தமக்கு திமுக.,வில் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி.

இந்நிலையில், இன்று முக அழகிரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் இந்த ஆலோசனைக் கூட்டம் 2021 ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

முக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் இருந்து ஆதரவாளர்களை அவர் வரவேற்றிருப்பதால், பரபரப்பு கூடியுள்ளது .

M -K -A-Press-News-251220
M -K -A-Press-News-251220

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories