டிவிட்டரில் ட்ரெண்டான #BanPFI #PFIexposed : பிஎஃப்ஐ ரூ.100 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளதாம்!

banpfi
banpfi

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற பிஎஃப்ஐ., அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக கேரள நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இன்று சமூகத் தளமான டிவிட்டரில் #BanPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

தென் இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளத்தை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் அடிப்படைவாத அமைப்பு.

அந்த அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பின் தலைவரான கே.ஏ.ராவுப் ஷரீப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காவலை நீட்டிக்கக் கோரி கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனு ஏற்கப்பட்டு மேலும் மூன்று நாட்கள் அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இந்த மனுவில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ள தகவலில், பிஎஃப்ஐ அமைப்புக்கு வெளிநாட்டு நிதி பெருமளவில் குவிந்திருப்பது தெரியவந்துள்ளது.

பிஎஃப்ஐ அமைப்பு, பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013ல் இருந்து இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன. இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது.

தில்லியில் நடந்த சிஏஏ., – குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த அமைப்பு அதிக அளவில் பண உதவி செய்துள்ளது. தில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த வன்முறையின் பின்னணியில் இந்த அமைப்பு உள்ளது.

pfi-exposed
pfi-exposed

பெங்களூரில் நடந்த வன்முறையிலும் இந்த அமைப்பின் பின்னணி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசவிரோத, வன்முறை நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் மீதான பல்வேறு பண மோசடி வழக்குகளையும் விசாரித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது அமலாக்கத்துறை.

இதை அடுத்து, டிவிட்டர் பதிவுகளில் #BANPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

https://twitter.com/RohitMi76915005/status/1342413471804137472

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories