December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

டிவிட்டரில் ட்ரெண்டான #BanPFI #PFIexposed : பிஎஃப்ஐ ரூ.100 கோடி வெளிநாட்டு நன்கொடை பெற்றுள்ளதாம்!

banpfi
banpfi

கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ‘பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா’ என்ற பிஎஃப்ஐ., அமைப்புக்கு, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளதாக கேரள நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை அடுத்து, இன்று சமூகத் தளமான டிவிட்டரில் #BanPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின.

தென் இந்திய மாநிலங்களில் ஒன்றான கேரளத்தை தலைமை இடமாகக் கொண்டு பல்வேறு மாநிலங்களிலும் கிளை பரப்பி செயல்பட்டு வருகிறது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் அடிப்படைவாத அமைப்பு.

அந்த அமைப்பின் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இண்டியா அமைப்பின் தலைவரான கே.ஏ.ராவுப் ஷரீப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காவலை நீட்டிக்கக் கோரி கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனு ஏற்கப்பட்டு மேலும் மூன்று நாட்கள் அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

இந்த மனுவில் அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ள தகவலில், பிஎஃப்ஐ அமைப்புக்கு வெளிநாட்டு நிதி பெருமளவில் குவிந்திருப்பது தெரியவந்துள்ளது.

பிஎஃப்ஐ அமைப்பு, பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013ல் இருந்து இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன. இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் போடப்பட்டுள்ளது.

தில்லியில் நடந்த சிஏஏ., – குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது இந்த அமைப்பு அதிக அளவில் பண உதவி செய்துள்ளது. தில்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த வன்முறையின் பின்னணியில் இந்த அமைப்பு உள்ளது.

pfi-exposed
pfi-exposed

பெங்களூரில் நடந்த வன்முறையிலும் இந்த அமைப்பின் பின்னணி உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேசவிரோத, வன்முறை நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் மீதான பல்வேறு பண மோசடி வழக்குகளையும் விசாரித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது அமலாக்கத்துறை.

இதை அடுத்து, டிவிட்டர் பதிவுகளில் #BANPFI #PFIexposed ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

https://twitter.com/RohitMi76915005/status/1342413471804137472

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories