3ம் தேதி கட்டாயம் வந்துடுங்க… அழைப்பு விடுத்த அழகிரி!

mkazhagiri
mkazhagiri

வரும் 3ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. என் ஆதரவாளர்கள் கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள் என்று மு.க.அழகிரி தனது ஆதராளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் 2021இல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என்று கூறியிருந்தார் மு.க.அழகிரி. இதை அடுத்து அவரது அந்தப் பங்களிப்பு என்ன என்று அறிவதில் ஊடகத்தினர் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.

இது குறித்து அழகிரி செல்லும் இடங்களில் எல்லாம் அரசியல் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அழகிரியும், ஓட்டு போடுவது கூட அரசியல் பங்களிப்புதான் என்று சொல்லிப் பார்த்தார். இருப்பினும், அவர் கட்சி தொடங்குவாரா, வேறு கட்சியில் சேருவாரா, கூட்டணி வைப்பாரா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ஊடகத்தினர்.

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், அழகிரி அவர் பக்கம் சாய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப் படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தனது தாயாரை சென்னை கோபாலபுரத்தில் சந்தித்துப் பேசி, ஆசி பெற்றார். இதை அடுத்து அவர் திமுக.,வில் சேருவாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் தாம் திமுக., பக்கம் சேரப் போவதில்லை என்றும், தமக்கு திமுக.,வில் அழைப்பு வரவில்லை என்றும் கூறினார் அழகிரி.

இந்நிலையில், இன்று முக அழகிரி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன் இந்த ஆலோசனைக் கூட்டம் 2021 ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலஸில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

முக கவசம் அணிந்து வர வேண்டும் இப்படிக்கு முக அழகிரி என்று குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுதும் இருந்து ஆதரவாளர்களை அவர் வரவேற்றிருப்பதால், பரபரப்பு கூடியுள்ளது .

M -K -A-Press-News-251220
M -K -A-Press-News-251220

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories