February 21, 2026, 1:40 AM
26.7 C
Chennai

பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை தமிழக முதல்வர் ஆய்வு

08 June 29 palanisamy - 2026

பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி நீர் வழிந்தோடுகிறது. இதையடுத்து அணைகள் நிரம்பி காவிரி ஆறு, பவானி ஆறு, கொள்ளிடம் ஆறு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் கரைபுரண்டோடி வருகிறது. இதையடுத்து பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு செய்தார்ய ஆற்றுப் பாலத்தில் நின்றபடி வெள்ளப் பெருக்கை பார்வையிட்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கோட்டையன், கருப்பண்ணன், எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகளும் உடன் சென்றனர். இதைத் தொடர்ந்து அவர் குடியிருப்பு பகுதிகளிலும் ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளித்தார். ஈரோடு மாவட்டம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன என தெரிவித்தார். ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 1,976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என வெள்ளபாதிப்பை ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டியளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories