திருமணமான ஒரே மாதத்தில் புதுமனைவி மாயம் : கணவர் புகார்

Published:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புலித்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது27). இவரது மனைவி சவுந்தர்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.

கப்பலூரில் உள்ள ஒரு தையல் பயிற்சி நிறுவனத்தில் திருமணத்திற்கு முன்பு சவுந்தர்யா பயிற்சி பெற்று வந்தார். நேற்று அதற்கான சான்றிதழ் வாங்க வேண்டும் என கணவரிடம் கூறினார்.

இதனை தொடர்ந்து புதுமண தம்பதியர் கப்பலூர் வந்தனர்.
இந்த நிலையில் கணவரை கம்பெனி வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்ற அவரது மனைவி சவுந்தர்யா அதன் பிறகு வெளியே வரவில்லை.

நீண்ட நேரமாக காத்திருந்த ராஜபாண்டி, உள்ளே சென்று விசாரித்தபோது பின்பக்க வழியாக சவுந்தர்யா சென்று விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் ராஜபாண்டி புகார் செய்தார். புகாரில் மதுரை பைக்காராவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் ஒருவருடன் சவுந்தர்யாவுக்கு பழக்கம் இருந்ததாகவும், அவருடன் சென்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இதுகுறித்து காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img