கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலானி!

nilani1 actress arrested - 2026

சென்னை: நடிகை நிலானி சென்னை மதுரவாயலில் உள்ள தமது வீட்டில் வைத்து, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையில் உள்ளார்.

சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித் குமாருடன் நெருங்கிப் பழகிய நிலானி, திடீரென அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் போலீஸார் இருவரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, நிலானியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் சென்ற காந்தி லலித்குமார், மீண்டும் அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கே.கே.நகரில் நடு சாலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

nilani lalithkumar1 - 2026

இதை அடுத்து, காந்தி லலித் குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி விளக்கம் அளித்தார்.

மேலும், லலித் குமாருடன் தாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சிலர் திட்டமிட்டே பரப்பி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக நிலானி கூறினார். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதாக நிலானி தெரிவித்திருந்தார். இதை அடுத்து செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.

nilani actress - 2026

ஆனால், நிலானியின் குழந்தைகள் வந்து, தனது தாய் விஷம் குடித்து விட்டதாக அழுதுள்ளனர். தகவலறிந்து அருகில் வசிப்போர், நிலானியை மீட்டு கே.கே. நகர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

அப்போது நிலானி, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. நிலானிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories