கொசுமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலானி!

nilani1 actress arrested - 2026

சென்னை: நடிகை நிலானி சென்னை மதுரவாயலில் உள்ள தமது வீட்டில் வைத்து, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிசையில் உள்ளார்.

சினிமா உதவி இயக்குனர் காந்தி லலித் குமாருடன் நெருங்கிப் பழகிய நிலானி, திடீரென அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் போலீஸார் இருவரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரித்துள்ளனர். தொடர்ந்து, நிலானியை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கூறிச் சென்ற காந்தி லலித்குமார், மீண்டும் அவரை மிரட்டியதாகத் தெரிகிறது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி கே.கே.நகரில் நடு சாலையில் காந்தி லலித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

nilani lalithkumar1 - 2026

இதை அடுத்து, காந்தி லலித் குமார் தற்கொலைக்கும், தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று சென்னை வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலானி விளக்கம் அளித்தார்.

மேலும், லலித் குமாருடன் தாம் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சிலர் திட்டமிட்டே பரப்பி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக நிலானி கூறினார். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள தனது வீட்டில் வைத்து ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதாக நிலானி தெரிவித்திருந்தார். இதை அடுத்து செய்தியாளர்கள் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.

nilani actress - 2026

ஆனால், நிலானியின் குழந்தைகள் வந்து, தனது தாய் விஷம் குடித்து விட்டதாக அழுதுள்ளனர். தகவலறிந்து அருகில் வசிப்போர், நிலானியை மீட்டு கே.கே. நகர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.

அப்போது நிலானி, கொசு மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது. நிலானிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories