December 5, 2025, 4:55 PM
27.9 C
Chennai

நான் அடிச்சிருவேனோன்னு முதல்வரே பயப்படுறாரு! போலீஸ் குறித்து அவதூறு! கருணாஸ் எம்.எல்.ஏ., மீது வழக்குப் பதிவு!

karunas - 2025

சென்னை: தமிழக முதலமைச்சர், காவல் துறை அதிகாரியை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், சர்ச்சைக்குரிய வகையில் முதல்வர், காவல் துறை அதிகாரி ஆகியோரை அவதூறாகப்பேசியதாக, அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை அன்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்த இயக்கத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், முதலமைச்சர் என்னைக் கண்டாலே பயப்படுகிறார், நான் அடித்துவிடுவேனோ என்று பயந்துபோய் தள்ளிச் செல்கிறார் என்று பேசினார். மேலும், சென்னையில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்து அவதூறாகப் பேசினார். கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

மேலும், சாதி மோதலைத் தூண்டும் வகையில், வன்னியர், தேவர், ஜான் பாண்டியன் என்றெல்லாம் சினிமா வசனத்தைப் பேசுவது போல் பொது இடத்தில் மேடையில் பேசினார். அவரது பேச்சு கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகவும், எனவே கருணாஸ் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.

மேலும், கருணாஸின் பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. கருணாசின் பேச்சுக்கான விளைவுகளை அவர் சந்தித்தே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

தன் அமைப்பு இளைஞர்களை சரக்கு அடி, கொலை செய், வன்முறையில் இறங்கு என்று சாதி உணர்வுகளைத் தூண்டி விடும் வகையில் பேசியதுடன், அவர் சார்ந்த சாதி அமைப்புக்கு சம்பந்தமே இல்லாத திருமுருகன் காந்தி, ராஜீவ் கொலையாளிகள் ஆகியோருக்கு ஆதரவாகவும் பேசி, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் கருணாஸ்.

இந்நிலையில், இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், சாதி-மத-இன மோதலை தூண்டுவது, கொலை மிரட்டல், கூட்டுச் சதி, அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories