ரூ.1 லட்சம்  தமிழக வெள்ள நிவாரண நிதியாக  வழங்கிய பாலியல் தொழிலாளர்கள்

Published:

 

 தமிழகத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்கள் தமிழக வெள்ள நிவாரண பணிகளுக்காக சினேகாலயா’ என்ற தொண்டு நிறுவனம், அகமதுநகரில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை அந்த மாவட்டத்தின் ஆட்சியர் அனில் கவடேவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர்.

 பாலியல் தொழிலாளர்கள் வெள்ள நிவாரண நிதி அளித்தது குறித்து   சினேகாலயா’ நிறுவனர் கிரிஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம்  கூறியதாவது :-

 தமிழக வெள்ள பாதிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, கடந்த 4 நாட்களாக பாலியல் தொழிலாள  பெண்கள் மன உளைச்சலில் இருந்தனர். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3 ஆயிரம்  பாலியல் தொழிலாளர்களில் 2 ஆயிரம் பேர், இந்த நிதியில் தங்கள் பங்கை கொடுத்துள்ளனர். மேலும், கடந்த 4 நாட்களாக தினமும் ஒருவேளை மட்டுமே அவர்கள் சாப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என கிரிஷ் குல்கர்னி செய்தியாளர்களிடம்  கூறினார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img