பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி!

Published:

edappadi modi - 2026

புது தில்லி: தில்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

பல்வேறு விவகாரங்களில், தமிழகத்தில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் எடப்பாடியாரின் தில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. தினகரன் – ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் படாதது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்று வெளியான செய்தியால் எழுந்த தாக்கம் என பல்வேறு விவகாரங்கள் தற்போது தமிழக அரசியலில் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றுள்ளார். அவருடன், அமைச்சர் ஜெயக்குமாரும், அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்ய மனு அளிப்பார் என்று கூறப் படுகிறது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

நேற்று இரவு தில்லி சென்றடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக., எம்.பி.க்கள் சிலர் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் அனைத்து எம்.பிக்களையும் முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img