திமுக., கருணாநிதி பேரைச் சொல்லியே பலரையும் மிரட்டி வந்த வைரமுத்து! அரசல்புரசலாய் போட்டுடைத்த சின்மயி!

metoo - 2026

 

திமுக., கவிஞர் என்றும், திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கு ஊழியம் பார்த்த முதன்மைக் கவிஞர் என்றும் கூறப்படும் வைரமுத்து, தனக்கு இருந்த திமுக., நெருக்கம், அரசியல் செல்வாக்கு இவற்றை வைத்தே பலரையும் மடக்கி, இளம்பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி மிரட்டி வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி #MeToo ஹேஷ்டேக்கில் அதிர்ச்சி தரத்தக்க பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.

சின்மயி தனது ட்விட்டர் பதிவில், ‘2005 அல்லது 2006 என நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு? என நாங்கள் கேட்டபோது, ‘வைரமுத்து இருக்கும் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். ஏன் எதற்கு? என்று கேட்டபோது, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். மறுத்த நாங்கள் சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் என்னால் இயலாது என்று மறுத்தேன். அதற்கு அவர், ‘அந்த அரசியல் தலைவர் குறித்து நீ தரக் குறைவாகப் பேசினாய் என்று அவரிடம் சொல்லி விடுவேன்’ என என்னை மிரட்டினார்.

இந்நிலையில் என் வீட்டில் இருந்தவர்கள் என்னை சமாதானப் படுத்தினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேனேஜருக்கு போன் செய்து, ‘நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். நான் இதுவரை அரசியல் குறித்து பொது இடங்களில் பேசியதில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். அவர் என்னை நம்புவார்’ என்று கூறினேன். இன்று என்னிடம் வைரமுத்து குறித்து மற்றவர்கள் ஏன் குற்றம் சாட்டி பேச மறுக்கிறார்கள் என கேள்வி கேட்கின்றனர். இப்போது புரிகிறதா ஏஏன் என்று?’ எனக் கேட்டுள்ளார் சின்மயி!

இந்நிலையில், நடிகை சின்மயிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. பெண்கள் பலர் அவரது டிவிட்டர் பதிவுக்கு ஆதரவாக ரிட்வீட் செய்தும், அவரது கருத்தை ஆமோதித்தும் கருத்துக் கூறியும் வருகின்றனர்.

ஏற்கெனவே நடிகை கஸ்தூரி பதிவிடும் டிவிட்டர்களுக்கு திமுக.,வினர் காட்டும் மோசமான மொழியினால் ஆன டிவிட்களுக்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் அந்தப் பட்டியலில் இனி சின்மயியும் சேரக் கூடும். இத்தகைய கொடூரமான அவதூறுத் தாக்குதல்களுக்கு அச்சப்பட்டே பலரும் ஒதுங்கியிருக்கும் நிலையில், சின்மயி தைரியமாக தன் கருத்துகளைத் தெரிவிக்க முன்வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டி யுள்ளார். தனது ட்விட்டர் பதிவு மூலம் சின்மயிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

5 COMMENTS

  1. Almost all the prominent persons have one original and two or more stepneys. Which leader did not have sexual relation with other women ? E.V.R, the demi God of dravidian parties had said long time ago that all men can satisfy sex thrust with their mothers, daughters other than wife if there is urge. All are women only.

  2. கலைஞர் பாவம் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியிலேயே இல்லை. அவரை வைத்து எப்படி மற்றவர்களை மிரட்ட முடியும். அம்மா ஆட்சியில் இருக்கும்போது அது நடக்குமா.

  3. பலதார கரேணாநிதியின் சிஷ்யன். குருவை மிஞ்சிய கருப்பு கஞ்சா வைரமுத்துவுக்கு பணபெற்று பேசும் ஆமைகறிஷைமான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories