திமுக., கவிஞர் என்றும், திமுக., தலைவராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த கருணாநிதிக்கு ஊழியம் பார்த்த முதன்மைக் கவிஞர் என்றும் கூறப்படும் வைரமுத்து, தனக்கு இருந்த திமுக., நெருக்கம், அரசியல் செல்வாக்கு இவற்றை வைத்தே பலரையும் மடக்கி, இளம்பெண்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி மிரட்டி வந்துள்ளது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாடகி சின்மயி #MeToo ஹேஷ்டேக்கில் அதிர்ச்சி தரத்தக்க பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
சின்மயி தனது ட்விட்டர் பதிவில், ‘2005 அல்லது 2006 என நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு? என நாங்கள் கேட்டபோது, ‘வைரமுத்து இருக்கும் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். ஏன் எதற்கு? என்று கேட்டபோது, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். மறுத்த நாங்கள் சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வைரமுத்து, அவர் எழுதிய புத்தக வெளியீட்டிற்கு என்னை அழைத்து, தமிழ்த் தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டார். நான் என்னால் இயலாது என்று மறுத்தேன். அதற்கு அவர், ‘அந்த அரசியல் தலைவர் குறித்து நீ தரக் குறைவாகப் பேசினாய் என்று அவரிடம் சொல்லி விடுவேன்’ என என்னை மிரட்டினார்.
இந்நிலையில் என் வீட்டில் இருந்தவர்கள் என்னை சமாதானப் படுத்தினர். அதன் பிறகு வைரமுத்துவின் மேனேஜருக்கு போன் செய்து, ‘நான் அதே அரசியல்வாதியிடம் சென்று அப்படி பேசவில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். நான் இதுவரை அரசியல் குறித்து பொது இடங்களில் பேசியதில்லை என்பதை எடுத்துக் கூறுவேன். அவர் என்னை நம்புவார்’ என்று கூறினேன். இன்று என்னிடம் வைரமுத்து குறித்து மற்றவர்கள் ஏன் குற்றம் சாட்டி பேச மறுக்கிறார்கள் என கேள்வி கேட்கின்றனர். இப்போது புரிகிறதா ஏஏன் என்று?’ எனக் கேட்டுள்ளார் சின்மயி!
இந்நிலையில், நடிகை சின்மயிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. பெண்கள் பலர் அவரது டிவிட்டர் பதிவுக்கு ஆதரவாக ரிட்வீட் செய்தும், அவரது கருத்தை ஆமோதித்தும் கருத்துக் கூறியும் வருகின்றனர்.
ஏற்கெனவே நடிகை கஸ்தூரி பதிவிடும் டிவிட்டர்களுக்கு திமுக.,வினர் காட்டும் மோசமான மொழியினால் ஆன டிவிட்களுக்கு அவர் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் அந்தப் பட்டியலில் இனி சின்மயியும் சேரக் கூடும். இத்தகைய கொடூரமான அவதூறுத் தாக்குதல்களுக்கு அச்சப்பட்டே பலரும் ஒதுங்கியிருக்கும் நிலையில், சின்மயி தைரியமாக தன் கருத்துகளைத் தெரிவிக்க முன்வந்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், சின்மயிக்கு நடிகர் சித்தார்த் ஆதரவுக்கரம் நீட்டி யுள்ளார். தனது ட்விட்டர் பதிவு மூலம் சின்மயிக்கு ஆதரவாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
If the accuser names herself, you say she’s doing it for attention. If the accuser stays anonymous,you question her authenticity. The identity of the accuser is not relevant. That she chose to identify her abuser publicly is! Courage & closure supercede all else. #TimesUp #MeToo
— Siddharth (@Actor_Siddharth) October 9, 2018


