தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!

andhyodayatrain - 2026

தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, தாமதிக்காமல் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

சென்னை, தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு, அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும்’ என, கடந்த ஆண்டு நவம்பரில், தெற்கு ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமானதால், குறிப்பிட்ட நாளில் இயக்கவில்லை.இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி இடையே, ஜூலையில் இருந்து, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை.இந்நிலையில், ஆக., 14ல், தெற்கு ரயில்வே, புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதில், கடந்த ஆண்டு அறிவிக்கபட்ட அந்தியோதயா ரயில், நேரம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ரயிலாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, தினமும் காலை, 7:00 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கும் இயக்கப்படும். மற்ற விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவித்தது.

இந்த ரயிலுக்கு, நான்கு மாதங்களாக, பெட்டிகள் தயாராக இருந்தும், ரயில் சேவை இன்னும் துவங்கப்படவில்லை.’இந்த ரயிலை, இனியும் தாமதிக்காமல் இயக்க வேண்டும்’ என, தஞ்சை பயணியர் சங்க ஆலோசகர் கிரி, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர் கிருஷ்ணன் ஆகியோர், தெற்கு ரயில்வேக்கு, மனு அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.

செங்கோட்டை அந்தியோதயா ரயில், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் என்பதால், தென் மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளாக இருக்கும். எனவே, தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, இனியும் தாமதிக்காமல், உடனடியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories