தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!

andhyodayatrain - 2026

தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, தாமதிக்காமல் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

சென்னை, தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு, அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும்’ என, கடந்த ஆண்டு நவம்பரில், தெற்கு ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமானதால், குறிப்பிட்ட நாளில் இயக்கவில்லை.இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி இடையே, ஜூலையில் இருந்து, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை.இந்நிலையில், ஆக., 14ல், தெற்கு ரயில்வே, புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதில், கடந்த ஆண்டு அறிவிக்கபட்ட அந்தியோதயா ரயில், நேரம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ரயிலாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, தினமும் காலை, 7:00 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கும் இயக்கப்படும். மற்ற விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவித்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்த ரயிலுக்கு, நான்கு மாதங்களாக, பெட்டிகள் தயாராக இருந்தும், ரயில் சேவை இன்னும் துவங்கப்படவில்லை.’இந்த ரயிலை, இனியும் தாமதிக்காமல் இயக்க வேண்டும்’ என, தஞ்சை பயணியர் சங்க ஆலோசகர் கிரி, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர் கிருஷ்ணன் ஆகியோர், தெற்கு ரயில்வேக்கு, மனு அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.

செங்கோட்டை அந்தியோதயா ரயில், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் என்பதால், தென் மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளாக இருக்கும். எனவே, தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, இனியும் தாமதிக்காமல், உடனடியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories