தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!

andhyodayatrain - 2026

தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, தாமதிக்காமல் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது

சென்னை, தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு, அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும்’ என, கடந்த ஆண்டு நவம்பரில், தெற்கு ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

இந்த ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமானதால், குறிப்பிட்ட நாளில் இயக்கவில்லை.இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி இடையே, ஜூலையில் இருந்து, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை.இந்நிலையில், ஆக., 14ல், தெற்கு ரயில்வே, புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது.

அதில், கடந்த ஆண்டு அறிவிக்கபட்ட அந்தியோதயா ரயில், நேரம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ரயிலாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, தினமும் காலை, 7:00 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கும் இயக்கப்படும். மற்ற விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவித்தது.

இந்த ரயிலுக்கு, நான்கு மாதங்களாக, பெட்டிகள் தயாராக இருந்தும், ரயில் சேவை இன்னும் துவங்கப்படவில்லை.’இந்த ரயிலை, இனியும் தாமதிக்காமல் இயக்க வேண்டும்’ என, தஞ்சை பயணியர் சங்க ஆலோசகர் கிரி, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர் கிருஷ்ணன் ஆகியோர், தெற்கு ரயில்வேக்கு, மனு அனுப்பியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.

செங்கோட்டை அந்தியோதயா ரயில், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் என்பதால், தென் மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளாக இருக்கும். எனவே, தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, இனியும் தாமதிக்காமல், உடனடியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories