ராகுல் காந்தி இன்னும் சின்னப் புள்ளதான்! : கிண்டலடிக்கிறார் கேஜ்ரிவால்

Published:

புது தில்லி:
ராகுல் காந்தி இன்னமும் சின்னப் புள்ளையாகத்தான் இருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

மேற்கு தில்லியில் உள்ள சக்கூர் பஸ்தி பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 500 குடிசை வீடுகள் ரயில்வே துறையால் இடித்துத் தள்ளப்பட்டது. நேற்று காலை அந்த இடத்துக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற ராகுல் காந்தி குடிசைகளை இழந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் பேசிய போது,

‘‘மோடியின் மத்திய அரசும், கேஜ்ரிவாலின் மாநில அரசும்தான் இதற்குக் காரணம். குடிசைவாசிகளின் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.’’ என்றார்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தில்லி முதல்வர் கேஜ்ரிவால், ‘‘ராகுல்காந்தி இன்னும் சிறு குழந்தையாகத்தான் இருக்கிறார். அவருடைய கட்சியினர், முதலில் அவருக்கு ரயில்வே துறை மத்திய அரசின் கீழ் உள்ளது; தில்லி மாநில அரசின் கீழ் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்’’ என்று கிண்டலடித்தார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img