December 6, 2025, 12:32 AM
26 C
Chennai

செங்கோல்,சர்கார் – ரெண்டு கதையும் ஒன்னுதான்! தீர்ப்பு கூறுபவர் உங்கள் கே.பாக்யராஜ்!

bhagyaraj horz - 2025

சர்கார் படத்தின் கதையும், சென்னை எழுத்தாளர் வருண் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் கதை வேறு ஒரு கதையில் இருந்து திருடப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது.

சர்க்கார் படத்தின் கதை மற்றும் திரைக்கதை என்னுடையது என்று கூறி சென்னையைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் வருண் என்கிற கே.வி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வருண் குறிப்பிடுகையில், செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதி 2007ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கதையைத் திருடி, அதில் சில மாற்றங்கள் செய்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விளக்கக் கேட்புக்கு பதிலளிக்கும் வகையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தெளிவாக விவாதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், சங்க உறுப்பினரான வருண் என்கிற கே.வி.ராஜேந்திரனின் செங்கோல் என்ற கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்றே என முடிவு செய்திருக்கிறோம்… என்று கூறப்பட்டிருக்கிறது!

நியாயம் வேண்டி, ராஜேந்திரன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு நாங்கள் தடை செய்ய மாட்டோம் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துவதாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஒற்றை விரல் தூக்கி போக்குக் காட்டும் போட்டு போஸ் கொடுத்து சர்கார் படத்தின் பாடல் ரிலீஸ் விழாவில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கலந்து கொள்ள, அந்த நிகழ்ச்சியில் ஏகத்துக்கும் சோப்பு போட்டு வெளுக்க வெளுக்க திணறடித்தார் விஜய்! அந்த ஒரு விரல் கதை ஏற்கெனவே ஒரு விரல் காட்டி ஓட்டுப் போட முயன்று முடியாமல் போன பலரின் வாழ்க்கைக் கதை என்பதும், அந்தக் கதைகளைத் தொகுத்த ஒருவரின் நிஜ கற்பனைக் கதை என்றும் இப்போது தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories