செங்கோல்,சர்கார் – ரெண்டு கதையும் ஒன்னுதான்! தீர்ப்பு கூறுபவர் உங்கள் கே.பாக்யராஜ்!

bhagyaraj horz - 2026

சர்கார் படத்தின் கதையும், சென்னை எழுத்தாளர் வருண் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்றுதான் என இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் கதை வேறு ஒரு கதையில் இருந்து திருடப்பட்டது என்று புகார் எழுந்துள்ளது.

சர்க்கார் படத்தின் கதை மற்றும் திரைக்கதை என்னுடையது என்று கூறி சென்னையைச் சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர் வருண் என்கிற கே.வி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து வருண் குறிப்பிடுகையில், செங்கோல் என்ற தலைப்பில் நான் எழுதி 2007ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்த கதையைத் திருடி, அதில் சில மாற்றங்கள் செய்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருக்கிறார் என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விளக்கக் கேட்புக்கு பதிலளிக்கும் வகையில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தெளிவாக விவாதித்து, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின் பேரில், சங்க உறுப்பினரான வருண் என்கிற கே.வி.ராஜேந்திரனின் செங்கோல் என்ற கதையும், சர்கார் படத்தின் கதையும் ஒன்றே என முடிவு செய்திருக்கிறோம்… என்று கூறப்பட்டிருக்கிறது!

நியாயம் வேண்டி, ராஜேந்திரன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதற்கு நாங்கள் தடை செய்ய மாட்டோம் என்றும் அதில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ராஜேந்திரனுக்கு முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துவதாகவும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஒற்றை விரல் தூக்கி போக்குக் காட்டும் போட்டு போஸ் கொடுத்து சர்கார் படத்தின் பாடல் ரிலீஸ் விழாவில் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் கலந்து கொள்ள, அந்த நிகழ்ச்சியில் ஏகத்துக்கும் சோப்பு போட்டு வெளுக்க வெளுக்க திணறடித்தார் விஜய்! அந்த ஒரு விரல் கதை ஏற்கெனவே ஒரு விரல் காட்டி ஓட்டுப் போட முயன்று முடியாமல் போன பலரின் வாழ்க்கைக் கதை என்பதும், அந்தக் கதைகளைத் தொகுத்த ஒருவரின் நிஜ கற்பனைக் கதை என்றும் இப்போது தெரியவந்துள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories