நவ.15ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

balachandran - 2026

சென்னை: கஜா புயல் நவ.15ஆம் தேதி முற்பகல் கடலூர் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியது…

தற்போது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ., தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி கடலூர்- ஸ்ரீஹரிகோட்டா இடையே 15ம் தேதி முற்பகலில் கரை கடக்கக் கூடும். அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும்.

அப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும். 12ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 12ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும். நவ.14ஆம் தேதி இரவு வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக் கூடும். நவ.15ஆம் தேதி அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது, தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்பதைக் குறிப்பிடாது. அந்த எச்சரிக்கை நிர்வாக ரீதியிலானது,.,, என்றார் அவர்.

முன்னதாக, வங்கக் கடலில் கஜா புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்தது. இதை அடுத்து ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தமிழக மீன்வளத்துறை அறிவித்தது. மறுஉத்தரவு வரும் வரை ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories